திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!! செப்.1 முதல் செல்போன் எடுத்துச் செல்ல தடை..!! அறநிலையத்துறை அதிரடி உத்தரவு..!!

Thiruvannamalai 2026

உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை முழுமையாகத் தடை விதித்துள்ளது. கோயிலின் புனிதம் மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும், சாமி சன்னதிகள் மற்றும் பிரகாரங்களில் ரீல்ஸ், வீடியோக்கள் மற்றும் செல்ஃபி எடுப்பதை தவிர்க்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லும் வகையில், கோயில் வளாகத்தில் 5 இடங்களில் பிரத்யேகப் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு ராஜகோபுரம் அருகில் 2 இடங்கள், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் 2 இடங்கள் மற்றும் தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் ஒரு இடம் என இந்த மையங்கள் செயல்படவுள்ளன.

பக்தர்கள் தங்களது அலைபேசிகளை ரூ.5 கட்டணம் செலுத்தி ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். சுவாமி மற்றும் அம்மன் தரிசனம் முடிந்த பிறகு, அந்த டோக்கனைக் காண்பித்துத் தங்களது செல்போன்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : BREAKING | அரசுப் பெண் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! இனி 3-வது குழந்தைக்கும் சம்பளத்துடன் ஓராண்டு மகப்பேறு விடுப்பு..!! அமைச்சர் அறிவிப்பு..!!

Next Post

வாரத்தில் 3 நாட்களுக்கு அரசுப் பேருந்து சேவைகள் நிறுத்தம்..!! போக்குவரத்துக் கழகத்தின் முடிவால் பயணிகள் அதிர்ச்சி..!!

Wed Aug 19 , 2026
தமிழ்நாட்டில் பயணிகள் நடமாட்டம் குறைவாக உள்ள வார நாட்களில், போதிய வருவாய் ஈட்டாத அரசுப் பேருந்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் போக்குவரத்து மண்டலங்களிலும் குறைவான வருவாய் உள்ள வழித்தடங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்ட நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் […]
TN Bus 2025

You May Like