அலாஸ்காவில் சோகம்!. தனி விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு!.

Alaska plane crash

அலாஸ்காவின் மேற்குப் பகுதியில் உள்ள தொலைதூர ரேடார் தளம் அருகே நேற்று (வியாழக்கிழமை) சென்ற தனி விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் அலாஸ்கா பிராந்தியத் தலைவர் கிளின்ட் ஜான்சன் கூறுகையில், இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் ஆறு பயணிகள் என மொத்தம் 8 பேர் பயணம் செய்ததாக தெரிவித்தார். அவர்களின் தற்போதைய நிலை குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், விமான விபத்தில் உயிர் தப்பியதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆஞ்சேரேஜில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், கேப் நியூவென்ஹாம் பகுதியை நெருங்கும் போது பிற்பகலில் விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது. எனினும், கிடைக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முதற்கட்டமானவை மட்டுமே என்று ஜான்சன் எச்சரித்துள்ளார்.

கேப் நியூவென்ஹாம் லாங் ரேஞ்ச் ரேடார் தளம் அருகே ‘விமான விபத்து’ நேரிட்டதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அலாஸ்கா மீட்பு ஒருங்கிணைப்பு மையம் உடனடியாகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடங்கியது. மேலும் தகவல்கள் கிடைக்கும் போது வெளியிடுவதாக அந்த முகமை தெரிவித்துள்ளது.

இதேபோல், அலாஸ்காவில் சமீபத்தில் விமான விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூன் மாதம், அலாஸ்காவில் அமெரிக்கக் கடலோர காவல்படையின் MH-60 ஜெயஹாக் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 4 பணியாளர்களும் காயமடைந்தனர். சிட்காவில் உள்ள ஹார்பர் மலை அருகே விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சிப் பறத்தலில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இந்த மாதத்தில் தொடர்ந்து பல விமான விபத்துகள் பதிவாகியுள்ளன. டெக்சாஸின் லாரேடோவில் செவ்வாய்க்கிழமை இரவு வணிக ஜெட் விமானம் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். முன்னதாக, கலிபோர்னியாவில் ஜூன் 15 அன்று நடந்த B-52 விமான சோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் 8 பேரும், ஜூன் 14 அன்று மிசூரியில் ஸ்கைடைவிங் விமான விபத்தில் 12 பேரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

வீட்டுப்பாடம் செய்யாத 6 வயது சிறுவன்.. சட்டையை கழற்றி ஆசிரியர் செய்த காரியம்.. பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

Fri Aug 21 , 2026
ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியர் குச்சியால் தாக்கியதாகவும், அதன்பின்னர் சிறுவன் மயங்கி விழுந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். விசாகப்பட்டினம் ஒன் டவுன் பகுதியில் உள்ள லிட்டில் கார்டன் பள்ளியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பிரணய் தேஜா என்ற அந்த சிறுவன், வியாழக்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அன்று காலை […]
WhatsApp Image 2026 08 21 at 11.12.26 AM

You May Like