மருத்துவமனையில் வார்மர் இயந்திரம் தீப்பிடித்து விபத்து!. பச்சிளம் குழந்தை உயிரிழந்த சோகம்!. 2 குழந்தைகள் கவலைக்கிடம்!

Newborn Dies

மத்தியப் பிரதேசம் சிந்தவாரா மாவட்ட மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வார்மர் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு குழந்தைகள் தீக்காயமடைந்தனர்.


நேற்று அதிகாலை 2 மணியளவில் வார்மர் (குழந்தைகளுக்கான வெப்பமூட்டும் கருவி) இயந்திரத்தின் பிலமென்ட்டில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக இந்த விபத்து நேரிட்டது. உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்கும் கருவிகளைக் கொண்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மாவட்ட மருத்துவமனை தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் காஞ்சன் துபே கூறுகையில், காயமடைந்த மூன்று குழந்தைகளுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஜபல்பூருக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்தார். அவர்களில் ஒரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. சாவில்வாராவில் குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாததால், ஜபல்பூருக்கு மாற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இந்த விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒருவரான சிவானி வர்மா மற்றும் ஆதித்யா வர்மா தம்பதியரின் குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்தச் சம்பவத்திற்கு மத்தியப் பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கர் பாஜக அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், மருத்துவமனைகள் நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிவருவதாகக் குற்றம்சாட்டியதோடு, மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உடனடி தீயை அணைக்கும் பாதுகாப்புத் தணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் மோகன் யாதவ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

1newsnationuser5

Next Post

விநாயகர் ஊர்வலத்தின் போது சிலை சரிந்து விழுந்ததில் இருவர் பலி!. 5 பேர் காயம்!. மும்பையில் சோகம்!.

Sun Aug 23 , 2026
மும்பையின் புலேஷ்வரம் பகுதியில் புகழ்பெற்ற ‘புலேஷ்வரச்சா ராஜா விநாயகர் சிலையைக் கொண்டு செல்லும் ஊர்வலத்தின் போது, பிரம்மாண்டமான சிலை திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் காயமடைந்தனர். சனிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 22) சுமார் 9:51 மணியளவில் புலேஷ்வரத்தில் உள்ள கபூர்கானா அருகில் உள்ள ஜெய அம்பே சவுக் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகப் பிரிஹன்பும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விபத்து எப்படி நடந்தது? […]
Ganpatiidolfalls

You May Like