பாத்ரூமில் 2 கள்ளக்காதலர்களுடன் மனைவி செய்த காரியம்!… ஜன்னல் வழியாக பார்த்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

694487f3dfb19f84fa8e438d4b4edb4293c5d87e7d6df1fa2f9af73a9de32f5e

ஹிமாச்சலப் பிரதேசத்தில் திருமணமான பெண் மருத்துவர் தொடர்பான கள்ளக்காதல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி இரண்டு இளைஞர்களை வீட்டிற்கு வரவழைத்து அந்தப் பெண் ரகசியமாக சந்தித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கணவன் எதிர்பாராத நேரத்தில் வீடு திரும்பியபோது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


சம்பவத்தன்று வெளியே சென்றிருந்த கணவன், திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்ததால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால், வீட்டின் பின்புறம் சென்று நிலைமையை கவனிக்க முயன்றுள்ளார்.

அப்போது ஜன்னல் மற்றும் குளியலறை வழியாக பார்த்தபோது, தனது மனைவியுடன் இரண்டு இளைஞர்கள் முகம் சுளிக்க வைக்கும் செயலில் ஈடுபட்டதை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவன், உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடியுள்ளார். தொடர்ந்து, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் மற்றும் போலீசார், அங்கிருந்த பெண்ணையும் இரண்டு இளைஞர்களையும் பிடித்தனர். அந்த இளைஞர்கள் அங்கிருந்து வெளியேற முயன்ற நிலையில், அவர்களை தடுத்து விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது இளைஞர்கள் இருவரும் அவரது கள்ளக்காதலர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கணவன் எதிர்பாராத நேரத்தில் வீட்டிற்கு திரும்பியதால் கள்ளக்காதல் தொடர்பான விவகாரம் வெளியே வந்த சம்பவம், ஹிமாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ஒரு பைசாவைக் கூட தொடமாட்டோம்!”… சட்டப்பேரவையில் விஜய் ஆவேசம்; திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

Saranya

Next Post

3 வயது குழந்தை துடிதுடித்து பலி!… பெற்றோருடன் சாலையோரம் நின்றபோது கார் மோதி கோர விபத்து..

Mon Sep 7 , 2026
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் வாழ்க்கையை சில நொடிகளில் சிதைத்துள்ளது கேரளாவில் நடந்த கோர விபத்து. சாலையோரம் பைக்கை நிறுத்தி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 3 வயது மகன் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் மூவரும் உயிரிழந்தனர். திருச்சூர் மாவட்டம் குருவாயூர் – குன்னம்குளம் சாலையில் சனிக்கிழமை நள்ளிரவில் இந்த விபத்து நடந்தது. முனீர் (35), […]
8eaa5b94591e9daf7763a7b84523e7f041261aa2993e2876a322d9682c632873

You May Like