மிளகாய் பொடி வீசி வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையன்!. 30 நிமிடத்தில் மடக்கி பிடித்த போலீஸ்!

nagpur bank theft 30kb

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் மிளகாய் பொடியை வீசி ரூ.4.53 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக்கர்தாரா காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள இந்த வங்கியில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


வங்கிச் செயல்பாட்டு நேரம் முடிந்த பிறகு கடந்த வியாழக்கிழமை மாலை இந்த கொள்ளை நடந்துள்ளது. முகத்தை மூடிக்கொண்டு வங்கியினுள் நுழைந்த சூரஜ் போர்ஹார் (Suraj Borkar) என்ற நபர், திடீரென வங்கி ஊழியர்களின் கண்களில் மிளகாய்ப் பொடியை வீசியுள்ளார். இதனால் வங்கியினுள் பெரும் பீதியும் குழப்பமும் ஏற்பட்டது.

இந்தக் கூச்சலின் நடுவே, ஊழியர்கள் வைத்திருந்த ரூ.4,53,000 ரொக்கம் இருந்த பையைச் சுருட்டிக்கொண்டு அந்த நபர் தப்பியோடினார். உடனடியாக விழித்துக்கொண்ட வங்கி ஊழியர்கள் அலறல் சத்தம் எழுப்பியவாறே அவரைத் துரத்தத் தொடங்கினர். அதே பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த சில காவலர்களும் உடன் சேர்ந்து கொள்ளையனைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

வங்கியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தப்பியோடிய சூரஜ் போர்ஹாரை, வெறும் 30 நிமிடங்களுக்குள்ளாகவே காவல்துறையினரும் ஊழியர்களும் சேர்ந்து மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட முழு தொகையும் மீட்கப்பட்டதால், வங்கிக்கு எந்தப் பண இழப்பும் ஏற்படவில்லை.

முதற்கட்ட விசாரணையில், வங்கியின் செயல்பாடுகளைக் கண்காணித்துத் திட்டமிட்டே இந்தத் தாக்குதலை அவர் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. வங்கி ஊழியர்கள் எப்போது ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்கிறார்கள் என்பதை நோட்டமிட்ட அவர், சரியான தருக்கத்திற்காகக் காத்திருந்து கைவரிசை காட்டியுள்ளார். வேலைவாய்ப்பின்மை காரணமாக இந்தத் துணிகரச் செயலில் அவர் இறங்கியிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

1newsnationuser5

Next Post

அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் கூட்டணி நாடுகளுக்கு வார்னிங்!. பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வட கொரியா!

Sat Sep 12 , 2026
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் பங்கேற்ற ஐந்து நாள் கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவடைந்த சில மணி நேரங்களிலேயே, வட கொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கடல் நோக்கி ஏவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு நேரடியாக அச்சுறுத்தலாகக் கருதப்படும் இந்த முத்தரப்புக் கூட்டுப் பயிற்சிகளுக்கு பியாங்யாங் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த ஏவுகணைத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. வட கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் […]
north korea 30kb

You May Like