fbpx

ரூ.988 கோடி பண மோசடி வழக்கு: சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..!!

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளனர். காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, “வழக்கு எந்த கட்டத்திலும் இருக்கலாம், ஆனால் விசாரணை என்பது நியாயமான நீதிக்கு வழிகாட்டும் முக்கிய செயல்பாடு” என்று கருத்து தெரிவித்தார். அடுத்த விசாரணை மே 8 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த வழக்கு 2014 ஜூன் மாதம் பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த தனிநபர் குற்றவியல் புகாரில் தொடங்கியது. இதில், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) மற்றும் யங் இந்தியன் நிறுவனங்களை பயன்படுத்தி குற்றவியல் சதி மற்றும் நிதி மோசடி செய்ததாக சோனியா மற்றும் ராகுல் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது

அமலாக்கத்துறை (ED) தரப்பில் தெரிவிக்கப்படுவது: காங்கிரஸ் AJL-க்கு ரூ.90 கோடி கடனாக வழங்கியதாகவும், பின்னர் அதை ரூ.50 லட்சத்திற்கு யங் இந்தியனுக்கு மாற்றியது. சோனியா மற்றும் ராகுல் காந்தி யங் இந்தியனில் 38-38% பங்குதாரர்கள். இந்த பரிவர்த்தனை மூலம் டெல்லி, மும்பை மற்றும் லக்னோவில் உள்ள AJL-ன் சொத்துக்கள் யங் இந்தியனுக்கு மாற்றப்பட்டன.

ED தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், இந்த பரிவர்த்தனை மூலம் ரூ.988 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “இது ஒரு அரசியல் சதி. மத்திய அரசு பழிவாங்கும் நோக்கத்தில் தான் இந்த வழக்கை துரத்துகிறது. யங் இந்தியன் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம். அதன் நோக்கம் AJL-ஐ மீட்டெடுத்தே ஆகும். சொத்துக்களை கையகப்படுத்தும் முயற்சி அல்ல.” எனக் கூறினார். இந்த வழக்கு, நாடாளுமன்றத் தேர்தல் சூழலில் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாகவே பார்க்கப்படுகிறது.

Read more: “ ஒரே ஒரு நாள் மாலை 6 மணிக்கு மேல வெளியே வர சொல்லுங்க..” தவெக தலைவர் விஜய்க்கு திருச்சி சூர்யா பகிரங்க சவால்..

English Summary

Rs.988 crore money laundering case: Court issues notice to Sonia and Rahul Gandhi..!!

Next Post

இந்த சாமி புகைப்படங்களை வீட்டில் வைக்கவே கூடாது.. குடும்பத்தில் பல பிரச்சனைகள் வரும்..!!

Fri May 2 , 2025
These photos of Sami should never be kept at home.. It will cause many problems in the family..!!

You May Like