பிரபல சினிமா தயாரிப்பாளரும், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சவுத்ரி சாலை விபத்தில் உயிரிழந்தார்.. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே கார் விபத்தில் சிக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..
நாட்டாமை, சூரியவம்சம், புது வசந்தம், ஆனந்தம் உள்ளிட்ட படங்களை தயாரித்து பிரபலமானாவர் ஆர்.பி. சவுத்ரி.. விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ஆர்.பி. சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று விஜய் வெற்றி பெற்றதை விசில் அடித்து கொண்டாடிய வீடியோவை நடிகர் ஜீவா வெளியிட்டிருந்தார்.. இந்த சூழலில் அவரின் தந்தை உயிரிழந்த செய்தி அவரின் மொத்த குடும்பத்தை உலுக்கி உள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
Read More : நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்..? பெரும்பான்மையை எப்படி நிரூபிக்க போகிறார்..?



