அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரில் பிஈ20 சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் அர்கன்சாஸ் நகரில் உள்ள கிளின்டன் விமான நிலையத்திலிருந்து ஒகியோ நகரில் உள்ள ஜான் க்ளென் கொலம்பஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு இரட்டை எஞ்சின் கொண்ட பிஇ20 என்ற சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கிளின்டன் விமான நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கியது. இந்தக் கோரச்சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த ஐந்து நபர்களுமே இறந்து விட்டதாக அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தனது செய்தி குரூப்பில் வெளியிட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணம் செய்த ஐந்து நபர்களும் கடந்த வாரம் ஒகியோ நகரில் நடைபெற்ற ஒரு தொழிற்சாலை வெடி விபத்து தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சென்றவர்கள் என்று தெரிய வந்திருக்கிறது. விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் அதிவேகமாக காற்று அடித்தது விமான விபத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் விரைவில் இந்த விபத்து பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவித்துள்ளது.