கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி விவாகரத்து பெற்ற கோபத்தில் அவரது அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றிய கணவரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளைப் பகுதியைச் சார்ந்தவர் தங்கம் இவரது மகன் சதீஷ்குமார் வயது 34. திருமணமான இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஒருவர் மீது ஒருவர் புரிந்துணர்வு இல்லாததால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். ஆனாலும் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதில் சதீஷ்குமாருக்கு கோபம் இருந்திருக்கிறது.
இதன் காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்ற பின்னர் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி அவருக்கு தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதனை கண்ட அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இது தொடர்பாக தோவாளை காவல் நிலையத்தில் புகாரளித்தார் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட எஸ்.பி இந்த வழக்கை சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றி காவல்துறை ஆய்வாளர் வசந்தி தலைமையிலான போலீசார் விசாரணை செய்து அந்தப் பெண்ணின் கணவர் சதீஷ்குமாரை கைது செய்தனர். மேலும் காவல்துறையின் விசாரணையில் அவர் தனது மனைவிக்கு தெரியாமலேயே அவரது அந்தரங்கங்களை வீடியோவாகவும் போட்டோவாகவும் எடுத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் மனைவியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அவதூறாக பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் தனது மனைவிக்கு ஆபாசமான குறுஞ்செய்தியையும் அனுப்பி இருக்கிறார். இது தொடர்பான வழக்குகள் அவர் மீது பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .