அசத்தும் அண்ணாமலை… தமிழகம் முழுவதும் இன்று போராட்டம்….! திணறும் திமுக அரசு….

தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்பொழுது இந்த ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறுமா என்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. தமிழகத்தின் மொழி, கல்வி உரிமையை பறிக்கும் அரசாக பாஜக இருக்கிறது. எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்தாலும் நாங்கள் சொல்லப்போவது இந்தி தெரியாது போடா எனவும் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


ஆனால் தமிழகத்தில் தி.மு.க-வினர் நடத்தும் பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டாயமாக இந்தியை கற்றுக் கொடுப்பதாக பாஜக தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. அதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் விதமாக தமிழக பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. இந்த நிலையில் போராட்டமானது அனைத்து மாவட்டங்களிலும் இன்று நடைபெறுகிறது கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார்.

Vignesh

Next Post

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்...! ஆளுநர் கோரிக்கையை நிராகரித்த முதல்வர்....!

Thu Oct 27 , 2022
தேசிய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் பேசிய அமைச்சர் பாலகோபாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கேரள ஆளுநர் ஆரிஃப் கான் கோரிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார். கேரள மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். பல்கலைக்கழகத்தில் தேசவிரோதமாக பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று […]
images 2022 10 27T041128.044

You May Like