குடிமகன்களுக்கு குட் நியூஸ்..!! இனி திருமண மண்டபங்களில் மது அருந்தலாம்..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம். மாவட்ட ஆட்சியரும், துணை ஆணையர்கள் இதற்கான அனுமதியை வழங்குவார்கள். பி.எல் 2எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், டாஸ்மாக்கை தவிர பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த மதுபானங்கள் இனி திருமணங்கள் மற்றும் விளையாட்டு கூடங்களிலும் பயன்படுத்த ஏதுவாக இருக்கிறது. இந்த அறிவிப்பு தொடர்பான கட்டுப்பாடுகளில் அந்தந்த பகுதியில் உள்ள  காவல்துறையினர் தேவைப்படும் பட்சத்தில் கண்காணிக்கலாம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அனுமதிக்கு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரால் கன்னியாகுமரியில் பரபரப்பு…..!

Mon Apr 24 , 2023
கேரள மாநில மாணவி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பார்க்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் சாம் இவருடைய நண்பர்கள் அகிலேஷ் ஷாபு, ஜிதின் வர்கீஸ், பூர்ணிமா, தினேஷ், சுருதி, சிதார்த். இதில் அஜின் சாம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாக்ராம் மூலமாக களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த பிளஸ்1 மாணவியிடம் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அதன் […]

You May Like