இளம் வயதிலேயே தரமான சம்பவம்..!! விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் சுப்மன் கில்..!!

இந்தியன் பிரீமியர் லீக்கில் 3,000 ரன்களை குவித்து கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டி வரலாற்றில் 3,000 ரன்களை குவித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார் சுப்மன் கில். நேற்று (10.04.2024) ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

சுப்மன் கில்லுக்கு முன்பு மிகக் குறைந்த வயதில் 3,000 ரன்களை குவித்த விளையாட்டு வீரராக விராட் கோலி இடம்பெற்றிருந்தார். விராட் கோலி தனது 26 வயதில் இந்த சாதனையை படைத்த நிலையில், சுப்மன் கில் தனது 24-வது வயதில் அதை முறியடித்துள்ளார்.

இந்த பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் 3-வது இடத்தில் உள்ளார். அவர் 26 வயது 320 நாட்களில் இந்த சாதனை படைத்தார். இதேபோல சுரேஷ் ரெய்னா 4-வது இடத்திலும், ரோஹித் ஷர்மா 5-வது இடத்திலும் உள்ளனர். ரோஹித் ஷர்மா இந்த சாதனையை நிகழ்த்தியபோது அவருக்கு வயது 27.

Read More : ’தமிழ்நாட்டை பின்பற்றி சிக்கிம் மாநிலத்திலும் அம்மா உணவகம்’..!! பாஜக தேர்தல் அறிக்கை..!!

Chella

Next Post

இந்த வழக்கிற்கே மரண தண்டனையா..? குற்றவாளி மீதான குற்றம் என்ன..? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

Thu Apr 11 , 2024
வியாட்நாம் நீதிமன்றம் பல பில்லியன் டாலர் பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ட்ரோங் மி லானுக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வியட்நாமின் முன்னணி நிறுவனமான ‘வான் தின் பாட்’ தலைவர் 67 வயதான ட்ரோங் மி லான், அபகரிப்பு, ஊழல் மற்றும் வங்கி விதிமுறைகள் மீறல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. மரண தண்டனை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தை […]

You May Like