கடினமாக உழைத்தும் வருமானம் பெருகாமல் பணத்தடையால் தவிப்பவர்களுக்காக, வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய தாந்திரீகப் பரிகார முறை ஆன்மீகத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. மகாலட்சுமியின் அருளை ஈர்த்து நிதி நெருக்கடியைப் போக்க உதவும் இந்தப் பரிகாரத்தை ஒரு சனிக்கிழமை நாளில், ராகு காலம் மற்றும் எமகண்ட நேரங்களைத் தவிர்த்து, சுப ஹோரை அல்லது கௌரி பஞ்சாங்கத்தில் ‘தனம்’, ‘லாபம்’ உள்ள சுப வேளையில் தொடங்குவது சிறந்தது.
இதற்கு பன்னீர், அத்தர் அல்லது ஜவ்வாது கொண்டு அலசி நிழலில் உலர்த்திய நறுமணம் மிக்க ஒரு சிறிய பச்சை நிறத் துணியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் செல்வ வசியத்தை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்ட 4 அல்லது 5 ஏலக்காய்கள், ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரம் ஆகியவற்றை ஒன்றாக வைத்து ஒரு சிறு மூட்டையாகக் கட்ட வேண்டும்.
இவ்வாறு தயார் செய்யப்பட்ட பச்சை நிற மூட்டையை நாம் பணம் வைக்கும் பீரோவிலோ அல்லது தொழில் செய்பவர்கள் தங்கள் வணிகக் கல்லாப்பெட்டியிலோ வைக்க வேண்டும். தினமும் வீட்டில் இறை வழிபாடு செய்யும்போது இந்த மூட்டைக்கும் தூப தீபம் காட்டி வர வேண்டும். தொடர்ந்து மாதத்திற்கு ஒருமுறை இந்த மூட்டையிலுள்ள பழைய பொருட்களை ஓடும் நீரிலோ அல்லது மரத்தடியிலோ போட்டுவிட்டு, புதிய பொருட்களை வைத்து மூட்டையைக் கட்டி வைப்பதன் மூலம் பணத்தடைகள் விலகி தொடர் பண வரவு உண்டாகும் என ஆன்மீக ரீதியாக நம்பப்படுகிறது.
Read More : BIG BREAKING | செப்.1ம் தேதி மேட்டூர் அணை திறப்பு..!! தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!



