இணையத்தில் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் வைரலாகி வரும். உலகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் என்ன நடக்கின்றதோ அதை அடுத்த நொடியே சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அப்படி தான் தற்போதும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
பொதுவாக அனைவரும் பாம்பு என்றால் பயந்து நடுங்குகிறோம். ஆனால் அந்த வீடியோவில் ஒரு சிறுவன் பாம்பின் வாலை பிடிக்க முயற்சி செய்கிறார். திடீரென மற்றொரு சிறுவன் அங்கு வந்து பாம்பை பிடித்து தூக்க முயற்சி செய்கிறார். அந்த பாம்பு சிறுவனை 2,3 முறை கொத்தி விடுகிறது. ஆனாலும் விடாமல் கொஞ்சம் கூட பயமில்லாமல் அந்த சிறுவன் பாம்பின் தலையை இறுக்கமாக பிடித்து கொள்கிறார். அந்த வீடியோ பார்ப்போரை பதற வைத்துள்ளது.
வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் தெளிவாக இல்லை. இருப்பினும், இது போன்ற அபாயகரமான செயலை யாரும் பின்பற்றக்கூடாது என்பதையும், பாம்புகள் போன்ற விலங்குகளை கையாளும் போது அவற்றின் ஆபத்துக்களை நன்கு புரிந்து கொண்டு, நிபுணர்களின் உதவியுடன் மட்டுமே அணுக வேண்டும் என்பதையும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது போன்ற வன உயிரினங்களை அணுகும் செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதினால், குழந்தைகள் தவறான தைரியத்தில் ஈடுபடக்கூடாதென்று பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
Read more: வெப்பத்தால் புற்றுநோயை குணப்படுத்தும் நானோ-கப்…! அசத்திய ஆராய்ச்சியாளர்கள்..!