திடீரென வந்த கணவன்! உல்லாசத்தில் இருந்த மனைவி!கள்ளக்காதலுடன் சேர்ந்து மிளகாய் பொடியை தூவி கொலை!

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவரை கள்ளக்காதலனும் மனைவியும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள என்.தட்டகல்லை என்ற ஊரைச் சார்ந்தவர் கந்தன் 35 வயதான இவர் டைல்ஸ் தொழில் செய்து வருகிறார் . ஐந்து வருடங்களுக்கு முன்பு இவர் சந்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் . தொழில் விஷயமாக அடிக்கடி கந்தன் வெளியூர் சென்று வருவதால் அவர்கள் வீட்டிற்கு பால் பாக்கெட் வாங்கி கொடுக்கும் சிவசக்தி என்ற இளைஞருடன் கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது. கந்தன் வெளியூர் செல்லும் நேரங்களில் எல்லாம் சிவ சக்தியை அழைத்து உல்லாசமாக இருந்திருக்கிறார் சந்தியா.


இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கந்தன் வெளியூர் செல்வதாக கூறியதால் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்திருக்கிறார் சந்தியா. இருவரும் தனிமையில் உல்லாசத்தில் இருந்த நேரத்தில் கந்தன் வந்து அதனை பார்த்து விட்டார். இதனால் கடும் கோபம் அடைந்த அவர் சந்தியாவை கடுமையாக தாக்கி இருக்கிறார். உடனே ஆத்திரமடைந்த சந்தியா அவரது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மிளகாய் பொடியை தூவி காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியால் சரமாரியாக குத்தி கந்தனை கொலை செய்திருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடிவிடவே கந்தன் கீழே விழுந்ததால் அவருக்கு அடிபட்டதாக நாடகமாடி இருக்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்த கந்தனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மரணத்தில் சந்தேகமடைந்த காவல்துறை அவர்கள் பாணியில் சந்தியாவிடம் விசாரித்ததில் அவர் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

1newsnationuser5

Next Post

"எதுவும் ஹெல்ப் பண்ணனுமா"! தேர்வு அறையிலேயே பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் சீண்டல்! தனியார் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ பாய்ந்தது!

Wed Mar 15 , 2023
தேர்வு எழுத வந்த மாணவிக்கு தேர்வு அறையிலேயே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. பிளஸ் ஒன் பொதுத் தேர்வுகள் புதன் கிழமை தொடங்கி தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களில் பொது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 13,114 பேர் பிளஸ் 1 பொது தேர்வு எழுதினர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அரசு மேல்நிலைப் […]
IMG 20230315 WA0094

You May Like