கூட்டு பாலியல் வன்கொடுமை! நாடகமாடிய இளம் பெண் –  காவல்துறை அதிர்ச்சி!

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி பெண் ஒருவர் புகார் அளித்து  நாடகமாடியது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கம் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் அவர் சென்னை செல்ல செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த புகாரின் பேரில் செங்கல்பட்டு காவல்துறை மற்றும்  சாலவாக்கம் காவல்துறையில் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் தனது காதலரை சிக்க வைக்க இப்படி ஒரு புகார் கொடுத்து நாடகமாடியது அம்பலமாகி இருக்கிறது. அந்தப் பெண் கொடுத்த புகாரை அடுத்து அவரை காவல்துறை விசாரணை செய்த போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை  கொடுத்திருக்கிறார்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணிடம் தீவிரமாக விசாரணை செய்ததில் அவர் சென்னை சென்று எத்தனை காதலனை மட்டும் சந்தித்து வந்ததாக உண்மையை ஒப்புக்கொண்டார். மேலும் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனவும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய காதலனை ஏமாற்றி விடுவதற்காகவே  பாலியல் வன்கொடுமை நாடகமாடியதாக  காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது . இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

1newsnationuser5

Next Post

அழுகிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு - கொலையா? தற்கொலையா?

Sun Feb 5 , 2023
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி கிராமத்தைச் சார்ந்த இரண்டு தோழிகள் மலையடிவாரத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அடுத்த பகலவாடி என்ற கிராமத்தைச் சார்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி சம்பூர்ணம் மற்றும்  அதை ஊரைச் சார்ந்தவர் பெரியக்காள்.  இவர்கள் இருவரது கணவர்களும் இறந்து விடவே  சில காலங்களாக பெரியக்காளும் சம்பூர்ணமும்  நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ளனர். எங்கு […]
WhatsApp Image 2023 02 05 at 6.13.06 PM

You May Like