வரும் 10-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை…!

நாளை முதல் 10-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் 10-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33- 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22- 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை. வழக்கம் போல கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம்.

Vignesh

Next Post

”நீங்கள் என் தலையை வெட்டினாலும் அகவிலைப்படியை உயர்த்த முடியாது”..!! சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு..!!

Tue Mar 7 , 2023
நீங்கள் என் தலையை வெட்டலாம் ஆனால் அகவிலைப்படியை இதற்கு மேல் உயர்த்த முடியாது என்று அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிராகரித்தார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி அம்மாநில நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா 2023-24ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, ஆசிரியர்கள் உள்பட தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற மாநில அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவித்தார். இதுவரை […]
govt employees leave staff

You May Like