EPFO சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி இருக்கிறது. தொழிலாளர் அமைச்சகம் மற்றும் EPFO-ன் உயரதிகாரிகள் பிஜேடி எம்பி பார்த்ரிஹரி மஹ்தாப் தலைமையிலான தொழிலாளர் குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு, இபிஎஃப் ஓய்வூதியத் திட்டத்தின் செயல்பாடு மற்றும் அதன் நிதி மேலாண்மை பற்றி தெரிவித்தனர். மாதாந்திரம் ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான தொழிலாளர் அமைச்சகத்தின் முன் மொழிவுக்கு நிதி அமைச்சகம் உடன்படவில்லை என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

அதன்பின் நிதி அமைச்சகத்தின் உயரதிகாரிகளை அழைத்து இவ்விவகாரம் குறித்து விளக்கம் பெற குழு முடிவு செய்துள்ளது. அக்குழு தனது அறிக்கையில் உறுப்பினர், விதவை, விதவை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு குறைந்தபட்சம் மாத ஓய்வூதியத்தை ரூ.2,000 ஆக அதிகரிக்க பரிந்துரைத்து இருக்கிறது. பணவீக்கம் அதிகரித்து வருவதை கருதி இந்த குழு இத்திட்டத்தை முன் வைத்திருக்கிறது.

குறிப்பிடத்தக்க அடிப்படையில் 6 மாதங்களில் ஓய்வு பெறவுள்ள ஊழியர்களுக்கு ஊழியர்களின் ஓய்வூதியத்திட்டம் 1995 (இபிஎஸ்-95)ன் கீழ் வைப்புத் தொகையை திரும்பப்பெற இபிஎப்ஓ ஒப்புக்கொண்டுள்ளது. இதுவரையிலும் EPFO சந்தாதாரர்கள் ஊழியர்களின் வருங்கால வைப்புநிதிக் கணக்கில் இருந்து டெபாசிட்களை எடுக்க ஓய்வுபெற 6 மாதங்களுக்கும் குறைவான சேவை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இம்முடிவால் தற்போது இபிஎப்ஓ சந்தாதாரர்கள் ஓய்வூதிய நிதியில் இருந்தும் பணத்தை எடுக்க இயலும்.

தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையில், 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் மீதமுள்ள உறுப்பினர்கள் தங்களது கணக்கில் இருந்து பணமெடுக்கும் வசதியை வழங்க வேண்டும் என சிபிடி அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. இது தவிர்த்து 34 வருடங்களுக்கும் மேலாக திட்டத்தின் ஒருபகுதியாக உள்ள உறுப்பினர்களுக்கு விகிதாசார ஓய்வூதிய பலன்களை அளிக்கவும், அறங்காவலர் குழு பரிந்துரைத்து இருக்கிறது. இவ்வசதியின் வாயிலாக ஓய்வூதியம் பெறுபவர்கள் அதன் பயன்களை நிர்ணயிக்கும் சமயத்தில் அதிக ஓய்வூதியம் பெறமுடியும்.