” தாலி ஈரம் கூட காயல.. ” திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தற்கொலை..!! மரண வீடாக மாறிய மறு வீடு.!

திண்டுக்கல் அருகே திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆன சில நாட்களிலேயே மரணம் நிகழ்ந்திருப்பதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் நொச்சி ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மகள் பிரியா(19). இவர் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவருடன் பிரியாவிற்கு திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணம் பிரியாவின் சம்மதமின்றி கட்டாயத்தின் பேரில் நடத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணத்தை தொடர்ந்து மணமக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை மறு வீட்டிற்க்காக திண்டுக்கல் அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்நிலையில் செவ்வாய் கிழமை இரவு புதுமண தம்பதியினர் இருவரும் தனித்தனியாக உறங்கச் சென்றுள்ளனர். புதன்கிழமை காலையில் பிரியா தனது ஆடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 4 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்திருப்பதால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது. புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

'திருமணத்திற்கு பிறகு கணவர் அவரது தாய்க்கு பணம் தருவது குடும்ப வன்முறை அல்ல’..!! மனைவியின் மனுவை நிராகரித்த கோர்ட்..!!

Thu Feb 15 , 2024
மும்பை ‘மந்த்ராலயா’வில் (மாநில செயலகம்) உதவியாளராக பணிபுரியும் பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் மாமியார் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தன் மாமியாருக்கு மனநோய் இருப்பதாகவும் அதனை மறைத்து ஏமாற்றித் தன்னைத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தனது கணவர் 1993 முதல் 2004 வரை வெளிநாட்டில் தங்கி இருந்ததாகவும், பின்னர் அவர் விடுப்பில் இந்தியா வரும்போதெல்லாம் அவரின் தாயை மட்டும் சந்திப்பதும், ஆண்டுதோறும் ரூ.10,000 தொகையை […]

You May Like