2023-24 ஆம் ஆண்டிற்குள் அனைத்து ரேஷன் கடைகளில் கட்டாயம்…! மத்திய அரசு உத்தரவு….!

நியாய விலைக் கடைகளின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த கூடுதல் வருவாய் வழிகளை ஆராயுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத் துறை செயலர்களை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.


மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவுத்துறை செயலர்கள் மாநாட்டில், தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படும் பொது விநியோக நடைமுறைகள் பற்றி அதன் செயலாளர் விளக்கினார். உணவு தானியங்கள், மளிகை பொருட்கள், திணை வகைகள் விற்பனை செய்வதையும், ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழகத்தின் முயற்சிகளுக்கு மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை செயலர் பாராட்டு தெரவித்தார். பல்வேறு திட்டங்களுடன் தொடர்புடைய அரிசி செறிவூட்டல், ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து மாநிலங்களின் உணவுத் துறை செயலாளர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டன.

மத்திய உணவு மற்றும் பொதுவிநியோக துறையின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக மாநாட்டுக்கு தலைமை வகித்த மத்திய அரசு செயலர் உறுதியளித்தார்.2023-24 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை முழுமையாக வழங்குவதை இந்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்று திரு சோப்ரா கூறினார். நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல், விநியோகம் ஆகியவற்றை உறுதிசெய்ய முழுமையாக தயாராக இருக்குமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Vignesh

Next Post

மக்களே இந்த தவறை மட்டும் இனி செய்யாதீங்க..!! ரூ.1 லட்சம் வரை அபராதம்..!!

Tue Dec 20 , 2022
சென்னை மாநகராட்சியின் பொது இடங்களில் அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டுபவர் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சென்னையில் பல இடங்களில் அனுமதியின்றி சுவர்களில் போஸ்டர் ஒட்டி செல்வதாக புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. பாதுகாப்பு சட்டம் 1959ன் படி பொது இடங்களில் உள்ள சுவர்களில் விளம்பர சம்பந்தமான போஸ்டர் மற்றும் பேனர் ஏதேனும் வைக்க நேர்ந்தால் […]
Chennai corporation

You May Like