ஆதார் அட்டை வைத்திருந்தால் சாப்பாடு… கல்யாண வீட்டில் நடந்த கூத்து..

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த திருமணத்தில் ஆதார் அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. இதனால் ஆதார் அட்டை இல்லாதவர்கள் சாப்பிடாமல் வெளியேறினர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் ஹாசன்பூரில் நடந்த திருமணத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமணத்திற்காக ஒரு குறிப்பிட்ட மக்களே அழைக்கப்பட்டிருந்தார்கள். அதே சமயம் திருமணம் முடியும் நிலையில் உணவு சாப்பிடும் அறைக்கு ஏராளமானோர் நுழைந்துள்ளனர். திருமணம் நடத்தியவர்களின் குடும்பத்தினர் பார்க்கும்போது அதில் யார் என்றே முகம் தெரியாதவர்கள் கும்பல் கும்பலாக சாப்பிட வந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடினடியாக ஒரு திட்டம் தீட்டினர். ஆதார்கார்டு இருந்தால் மட்டும் உள்ளே அனுமதியுங்கள் என கூறினர். இதனால் ஆதார் அட்டை வைத்திருந்தவர்கள் மட்டும் உள்ளே சென்று உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.


அதே சமயம் முக்கிய விருந்தினர்கள் சிலர் ஆதார் அட்டை இல்லாமல் வந்ததால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி வெளியேறினர்.இந்த சம்பவமும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அங்கிருந்த விருந்தினர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தலங்களில் பதிவிட்டதை அடுத்து வைரலாகி வருகின்றது.

அன்னியர்கள் உள்ளே வரக்கூடாது என்பதற்காக இந்த யோசனை சிறந்தது என்றாலும் உறவினர்களுக்கே அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

’ஓசி பஸ்ஸில் பயணிக்கும் பெண்கள்’..!! திமுக அமைச்சரின் பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

Mon Sep 26 , 2022
அரசு விழாவில் பெண்களை ஓசி பஸ்ஸில் பயணிப்பவர்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியது கண்டத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி, மகளிர் இலவச பயணத்திற்காக இந்த ஆண்டு 1,600 கோடி ரூபாயை போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன்படி  தமிழகத்தில் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், […]
’ஓசி பஸ்ஸில் பயணிக்கும் பெண்கள்’..!! திமுக அமைச்சரின் பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

You May Like