வாய்ப்பும், பணமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அட்ஜட்ஸ்மெண்ட்..!! சீரியல் நடிகை ஆர்த்திகா பகீர் தகவல்..!!

“வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை” என்று சின்னத்திரை நடிகை ஆர்த்திகா கூறியுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆர்த்திகா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இவர் நடிப்புத் துறையில் வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது அதிரடியாக பதில் சொல்லி இருக்கிறார். “வாய்ப்பும், பணமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்மெண்ட் செய்ய வேண்டிய தேவை எனக்கில்லை. என் திறமைக்கு என்ன வாய்ப்பு வருகிறதோ அதுவே மகிழ்ச்சி. அதற்காக, கடவுளுக்கு நான் நன்றி சொல்கிறேன்.

அப்படி செய்தால்தான் வாய்ப்பு வரும். இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடியும் என்றெல்லாம் இல்லை. அப்படியான சூழ்நிலை வந்தால், எனக்கு நடிப்பதைத் தவிர்த்து வேறு வேலைகளும் தெரியும்” என்றார். மேலும், “அப்படி வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்மெண்ட் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால், துறைக்குள் புதிதாக வருபவர்களிடமும் அதை எதிர்பார்க்கிறார்கள். எனக்கு கவர்ச்சியாக நடிக்கப் பிடிக்காது. அதை முன்பே தயாரிப்பாளர்களிடமும், இயக்குநரிடமும் சொல்லி விடுவேன். அதனால், எனக்கு சம்பளம் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை” என்று பேசியுள்ளார்.

Read More : பரப்புரை முடிந்த பிறகு சோசியல் மீடியாவில் பிரச்சாரம் செய்வது குற்றமா..? சத்யபிரதா சாஹூ அதிரடி பதில்..!!

Chella

Next Post

மாதம் ரூ.35,000..!! மத்திய அரசின் இந்த சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா..? பெற்றோர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Thu Mar 28 , 2024
மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இவற்றில் பெண் குழந்தைகளுக்கு பலனளிக்கும் சூப்பர் திட்டம் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கும் பட்சத்தில் மத்திய அரசு பெண் குழந்தைக்கு சாவித்திரிபாய் ஜோதிராவ் புலே பெல்லோஷிப் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக 5 ஆண்டுகளுக்கு பெண் குழந்தைக்கு இலவசமாக மத்திய அரசு […]

You May Like