அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களது குழந்தைகளின் உயர் கல்வி பயில்வதற்கான முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1,00,000, கலை மற்றும் அறிவியல் கல்விக்கு ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் உயர் கல்வி பயிலும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டில் இருந்து உயர்த்தப்படவுள்ளது. தமிழக அரசுப் குழந்தைகள் பணியாளர்களின் கல்வியில் உயர் சேர்வதற்கான முன்பணத்தை அரசு வழங்கி வருகின்றது. அதில், தொழில்கல்வி பயில ரூ.50,000, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் நிறுவனங்களில் சேர ரூ.25,000 என கல்வி முன்பணம் வழங்கப்பட்டு வந்தது.
அரசுப் ஆசிரியர்களின் குழந்தைகள் உயர் கல்வி பயிலும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்தவகையில், இந்த ஆண்டு முதல் தொழில்கல்வியில் சேர ரூ.1 லட்சமும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் நிறுவனங்களில் சேர ரூ.50 ஆயிரம் என கல்வி முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான அரசாணையை நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
Read more: பாதியாக குறைந்த பூக்களின் விலை… விவசாயிகள் வேதனை!