சோனமுத்தா போச்சா..! நிலவில் இடம் வாங்கி மனைவிக்கு சர்ப்ரைஸ்..! நாமக்கல் இளைஞருக்கு டிமிக்கி கொடுத்த அதிர்ச்சி பின்னணி..!

Namakkal 2026

தனது வருங்கால மனைவிக்கு வித்தியாசமான திருமணப் பரிசு அளிக்க வேண்டும் என்ற ஆசையில், நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியதாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் கூறியுள்ள நிலையில், இது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரான போலி மோசடி வலை என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் (32) என்ற பொறியியல் பட்டதாரி இளைஞருக்கும், மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமணப் பரிசாகத் தனது மனைவிக்குப் பிரத்யேகப் பரிசு வழங்க நினைத்த சரவணன், இணையதளத்தில் நிலவில் இடம் விற்பனை செய்யப்படுவதாக வந்த விளம்பரத்தை நம்பி முன்பதிவு செய்துள்ளார்.

இதற்காக அவரிடம் இருந்து ரூ.23,000 கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், சந்திரயான் விண்கலம் தரையிறங்கிய ‘சிவ சக்தி’ முனை பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி அதற்கான ஆவணங்களும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், வரும் செப்டம்பர் 17 அன்று அவரது வருங்கால மனைவி நிலவுக்குப் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாகவும் பரவிய தகவல் பேசுபொருளானது.

இருப்பினும், நிலவில் தனிநபர்கள் இடம் வாங்குவது என்பது முற்றிலும் சாத்தியமற்ற ஒரு ஏமாற்று வேலை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். கடந்த 1967-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் கையெழுத்திட்ட ‘சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி’ (Outer Space Treaty), நிலவு உள்ளிட்ட விண்வெளிப் பொருட்கள் எந்தவொரு தனிப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கோ அல்லது தனிநபர்களின் வணிக உரிமைக்கோ உட்படாது. விண்வெளி என்பது மனிதகுலத்தின் பொதுவான சொத்தாக கருதப்படும் சூழலில், இத்தகைய விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read More : சித்தப்பாவால் சீரழிந்த பிளஸ் 2 மாணவி..! ஆடிப்போன சித்தி..! வயிற்றில் குழந்தையோடு..! ராமநாதபுரத்தில் அரங்கேறிய அவலம்..!

Next Post

அமைச்சர் மரிய வில்சன் பதவி பறிபோகிறதா? தேர்தல் கமிஷனுக்கு பறந்த வக்கீல் நோட்டீஸ்..!!

Sun Aug 30 , 2026
தனது கல்வி நிறுவனத்திற்கு அனுமதி பெறுவதற்காக முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததாக சட்டசபையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த அமைச்சர் மரிய வில்சன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதுடன், அவரது எம்.எல்.ஏ. வெற்றிச் சான்றிதழைத் திரும்பப் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி.ஜெனிபர் சார்பில் அவரது வழக்கறிஞர் பி.விஜயேந்திரன் இந்த […]
Minister Mariya Vilsan 2026

You May Like