34 வயது பெண்ணை கரம்பிடித்த 80 வயது முதியவர்..!! சோசியல் மீடியாவில் பற்றிக் கொண்ட காதல்..!!

சமூக வலைதளம் மூலம் உருவான காதலால் 34 வயது பெண்ணை 80 வயது முதியவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பதில்லை. சில நேரங்களில் ஸ்மார்ட்போன் தான் நம்மை பயன்படுத்துகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக, சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. அதன்மூலம் ஏற்பட்ட காதலால் நடைபெற்ற திருமணமும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மத்தியப்பிரதேச மாநிலம் அகர் மாவட்டத்தின் மகாரியா கிராமத்தை சேர்ந்தவர் 80 வயதான முதியவர் பலுராம் பக்கிரி. அதேபோல, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்தவர் 34 வயதான பெண் ஷீலா இங்கிள். இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பின்பு, இருவரும் திருமண வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதன்படி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தற்போது, திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Read More : கூட்டுறவு வங்கிகளில் திமுகவின் கருப்பு பணம்..!! ஐடி விசாரணையில் அம்பலம்..!! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்..!!

Chella

Next Post

ரோபோ சங்கர் மருமகனின் மறுபக்கம்! குவியும் பாராட்டுக்கள்!!

Wed Apr 3 , 2024
நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும், நடிகையுமான இந்திரஜா சங்கருக்கும் கார்த்திக்கும் கடந்த 24-ம் தேதி மதுரையில் கோலாகலமாக நடந்தது. இதை தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நடந்தது.. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  இந்திரஜா திருமணம் செய்துகொண்ட கார்த்திக், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் சொந்த தம்பி என கூறப்பட்ட நிலையில், ஆதரவற்ற தன்னை பிரியங்கா தான் தத்தெடுத்து வளர்த்தார் என்று கார்த்திக் பேசியது பலரையும் வியப்பில் […]

You May Like