தலைநகர் டெல்லியில் சிதைந்த வெளிநாட்டு பெண்ணின் சடலம் அங்குள்ள ஒரு பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள கீதா காலனி பகுதியில் அழுகிய நிலையில் சடலமிருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்த உடலை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அழுகிய நிலையில் இருந்த அந்த உடலானது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வெளிநாட்டுப் பெண் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது பற்றி தகவல் தெரிவித்துள்ள காவல் துறையினர் அந்தப் பெண்ணின் சடலம் கிடந்த இடத்திலிருந்து அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பெண் வெளிநாட்டைச் சார்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது காவல்துறை. கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் அந்தப் பெண்ணிற்கு 67 வயது இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர் என்பது போன்ற தகவல்களை தெரிவிக்க காவல்துறையை மறுத்துவிட்டது. உடலானது மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை பிறகு அவர் கொலை செய்யப்பட்டாரா? மற்றும் அவரது இறப்பிற்கான காரணங்கள் தெரியவரும் என காவல்துறை தெரிவித்து இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நொய்டாவில் இருந்து ஒரு பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில் தற்போது வெளிநாட்டு பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.