காவி கொடியை கிழித்து சாக்கடையில் வீசிய நபர்! ராம் நவமி கொண்டாட்டங்களின் போது காவி கொடிக்கு களங்கம்!

காவி கொடியை கலங்கப்படுத்தியதாக டெல்லியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் சாஸ்திரி நகர் பகுதியில் ராம் நவமி பண்டிகையை ஒட்டி அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த காவி கொடிகளை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்று போய் அவற்றைக் கிழித்து கால்வாயில் வீசி எறிவது போன்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தன. இச்சம்பவம் தொடர்பாக சாகர் என்பவர் செவ்வாய்க்கிழமை மாலை 9 மணி அளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .


அந்தப் புகாரில் தங்கள் அருகில் வசித்து வரும் அசீம் என்னும் நபர் தங்கள் பகுதிகளில் கட்டப்பட்டிருந்த காவி கொடிகளை கிழித்து சாக்கடையில் வீசி எறிந்ததாக தெரிவித்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அசியம் என்பவரை கைது செய்து அவர் மீது 153/ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இதே போன்றதொரு சம்பவம் இதற்கு முன்பு நடைபெற்று இருக்கிறது அந்த சம்பவத்திலும் இஸ்லாமியரின் மீது காவிக்கொடிக்கு மதிப்பு கொடுக்கவில்லை எனக் கூறி பல வழக்குகளை போட்டு அந்த இளைஞரை கைது செய்து சிலையில் அடைத்தது காவல்துறை. தற்போது இந்த சம்பவம் இரண்டாவது முறையாக நடந்திருக்கிறது. ராம் நவமி பண்டிகையை ஒட்டி வட இந்தியாவின் பல பகுதிகளிலும் அசாதாரணமான சூழ்நிலை நிலவியது பீகார் போன்ற மாநிலங்களில் மசூதிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மக்கள் தங்களிடம் உள்ள வேறுபாடுகள் எல்லாவற்றையும் மறந்து ஒற்றுமையாக இருந்தாலும் சில சமூக விரோதிகள் அவர்களுக்கிடையே வன்மத்தை தூண்டி விட தயாராக இருக்கிறார்கள் என்பது மறக்க முடியாத உண்மை.

1newsnationuser5

Next Post

மத்திய அரசுக்கு எதிராக 14 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்..

Wed Apr 5 , 2023
மத்திய அரசு “மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது” என்று 14 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.. பாஜக தலைமையிலான மத்திய அரசு “மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவில் “95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக உள்ளன. கைதுக்கு முந்தைய வழிகாட்டுதல்கள் மற்றும் கைதுக்கு […]

You May Like