தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வழங்கிய ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது. அந்த பேட்டியில் அண்ணாமலை தெரிவித்ததாவது தமிழகத்தில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் நிறைந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது நாட்டில் ஊழல் மிகுந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு முதல் இடம் என்று கூட சொல்லலாம் என அவர் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில், கருத்து தெரிவித்திருக்கின்ற அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள இயலாத கருத்துக்களை ஒரு உள்நோக்கத்துடன் அண்ணாமலை பேசியிருக்கிறார் என கூறி இருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு தொண்டர்கள் இடையே மன வேதனையையும், கொந்தளிப்பையும் உண்டாக்கி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் எல்லோரும் ஜெயலலிதாவின் மீது மிகுந்த நன்மதிப்பு வைத்திருக்கிறார்கள். கடந்த 1998 ஆம் வருடம் பாரதிய ஜனதா கட்சியின் மத்தியில் ஆட்சிக்கு வர அதிமுக தான் காரணம் 120 வருடங்களுக்கு பின்னர் 4️ சட்டசபை உறுப்பினர்களை தமிழகத்தில் பாஜக பெறுவதற்கு அதிமுக தான் காரணம் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.