ஜெயலலிதா பற்றிய அண்ணாமலையின் பேச்சு மன வேதனையை ஏற்படுத்துகிறது……! எடப்பாடி பழனிச்சாமி வருத்தம்…..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வழங்கிய ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது. அந்த பேட்டியில் அண்ணாமலை தெரிவித்ததாவது தமிழகத்தில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் நிறைந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது நாட்டில் ஊழல் மிகுந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு முதல் இடம் என்று கூட சொல்லலாம் என அவர் கூறினார்.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில், கருத்து தெரிவித்திருக்கின்ற அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள இயலாத கருத்துக்களை ஒரு உள்நோக்கத்துடன் அண்ணாமலை பேசியிருக்கிறார் என கூறி இருக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு தொண்டர்கள் இடையே மன வேதனையையும், கொந்தளிப்பையும் உண்டாக்கி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் எல்லோரும் ஜெயலலிதாவின் மீது மிகுந்த நன்மதிப்பு வைத்திருக்கிறார்கள். கடந்த 1998 ஆம் வருடம் பாரதிய ஜனதா கட்சியின் மத்தியில் ஆட்சிக்கு வர அதிமுக தான் காரணம் 120 வருடங்களுக்கு பின்னர் 4️ சட்டசபை உறுப்பினர்களை தமிழகத்தில் பாஜக பெறுவதற்கு அதிமுக தான் காரணம் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

Next Post

மது அருந்திய இருவர் உயிரிழந்த விவகாரம், சயனைடு கலக்க பட்டதா?

Tue Jun 13 , 2023
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தத்தங்குடியைச் சேர்ந்தவர் பழனி குருநாதன் (55). இவர் மங்கைநல்லூர் கடைவீதியில் தச்சுப் பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த புராசாமி (65) என்பவர் அவரது தச்சுப் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் நண்பர்கள்போல் பழகிவந்த நிலையில், இரவு நேரங்களில் மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரண்டு பேரும் வாந்தி மயக்கத்துடன் பட்டறையில் கிடந்துள்ளனர். இதை அறிந்த […]
tasmack

You May Like