கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏசி வெடித்ததில் ஒரு பெண் உட்பட இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் ராயச்சூர், சக்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏசி வடித்ததால் ஏற்பட்ட தீயில் உடல் கருகி ஒரு பெண் உட்பட இரண்டு குழந்தைகள் பலியாகி இருக்கின்றனர். அந்த வீட்டில் ஏசி வெடித்து தீ பரவிய போது உள்ளிருந்த அந்தப் பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளால் வெளியே வர முடியவில்லை அதற்குள் தீ வேகமாக பரவியது. இதன் காரணமாக அந்த மூவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏசி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இனி கோடை நெருங்கிக் கொண்டிருப்பதால் எல்லோருக்கும் ஏசியின் தேவை இருக்கும். இதன் காரணமாக அவற்றை நாம் முறைப்படி கையாள வேண்டும். இது போன்ற விபத்துகளை தவிர்க்க ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.