’என்கிட்ட பிரச்சனை பண்ணவே வருவீங்களா’..? OPS-களால் மன உளைச்சலுக்கு ஆளான ஓ.பன்னீர்செல்வம்..!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் 4 முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரின் பெயரில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், ஓபிஎஸ்க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற சுயேட்சை வேட்பாளர்கள், தங்களின் பெயரை ஆங்கிலத்தில் OPS என குறிப்பிட்டு திராட்சை கொத்து, கரும்பு விவசாயி, வாளி உள்ளிட்ட சின்னங்களில் வாக்களிக்குமாறு சுவர் விளம்பரம் செய்துள்ளனர். இது ஓபிஎஸ்-க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Read More : பெண் குழந்தைகளுக்கு சூப்பர் திட்டம்..!! ரூ.25 லட்சத்தை மொத்தமாக அள்ளலாம்..!! பெற்றோர்களே நோட் பண்ணுங்க..!!

Chella

Next Post

அதிரடி காட்டும் NIA..! -ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் இரண்டு பேர் கைது!

Fri Apr 12 , 2024
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேரை கொல்கத்தா அருகே தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் கடந்த மாதம் 1ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் ப‌டுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த […]

You May Like