பெண் குழந்தைகளுக்கு சூப்பர் திட்டம்..!! ரூ.25 லட்சத்தை மொத்தமாக அள்ளலாம்..!! பெற்றோர்களே நோட் பண்ணுங்க..!!

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பலவிதமான பாலிசிகளை வழங்கி வருகிறது. பெண் குழந்தைகளின் நலன் கருதி கன்யாடன் பாலிசியை அளித்து வருகிறது. இத்திட்டத்தில் பெண் குழந்தையின் பெயரில் ஒரு வயது முதல் முதலீடு செய்யத் தொடங்கலாம். 13 முதல் 25 ஆண்டுகள் வரை இந்த பாலிசியின் காலம் ஆகும். பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் செலுத்தலாம். 25 ஆண்டு பாலிசியை தேர்வு செய்தால், 22 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும்.

இந்தத் திட்டம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும். இந்த பாலிசியை எடுக்க, பெண்ணின் தந்தை 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பாலிசியை எடுத்த 3ஆம் ஆண்டில் இருந்து கடன் வசதியும் கிடைக்கும். 2 ஆண்டுகளுக்கு பிறகு, பாலிசியை சரண்டர் செய்ய விரும்பினால், அந்த வசதியும் உள்ளது. ஒரு மாதத்தில் பிரீமியம் செலுத்தாவிட்டால், அடுத்த 30 நாட்களுக்குள் அபராதம் இல்லாமல் பிரீமியத்தை செலுத்தலாம்.

இந்த பாலிசி மூலம் 2 வழிகளில் வரிச் சலுகை பெறலாம். காப்பீட்டுத் தொகை குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதிகபட்ச வரம்பு இல்லை. 25 வருட பாலிசி எடுத்து ரூ.41,367 ஆண்டு பிரீமியம் செலுத்தினால், மாதாந்திர பிரீமியம் தொகை ரூ.3,447 ஆக இருக்கும். 22 ஆண்டுகளுக்கு இவ்வாறு முதலீடு செய்தால், 25 ஆண்டுகளுக்குப் பின் ரூ.22.5 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

பாலிசி எடுத்திருக்கும்போது தந்தை இறந்துபோனால், அடுத்து வரும் காலத்திற்கு அவரது பெண் பிரீமியம் செலுத்த வேண்டாம். பிரீமியம் தள்ளுபடி செய்யப்படும். இது தவிர, 25 ஆண்டுகள் முடியும் வரை ஆண்டுதோறும் ரூ.1 லட்சமும், 25ஆம் ஆண்டு முதிர்வுத் தொகையும் வழங்கப்படும். சாலை விபத்தில் தந்தை இறந்தால், நாமினிக்கு விபத்து மரணத்திற்கான பலனாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

Read More : Rain | தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!! கனமழை வெளுத்து வாங்கப்போகுது..!!

Chella

Next Post

’என்கிட்ட பிரச்சனை பண்ணவே வருவீங்களா’..? OPS-களால் மன உளைச்சலுக்கு ஆளான ஓ.பன்னீர்செல்வம்..!!

Fri Apr 12 , 2024
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் 4 முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், […]

You May Like