ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ஆஸ்திரேலிய நாட்டில் வாழும் இந்திய வம்சாவழி மக்களை பிரதமர் நரேந்திர மோடி சிட்னியில் உள்ள பிரம்மாண்டமான அரங்கில் சந்தித்தார். பிரதமரைக்கான சுமார் 21,000 இந்தியர்கள் அந்த அரங்கத்தில் ஒன்று திரண்டனர்.
அந்த அரங்கத்தில் இதற்கு முன்னர் அமெரிக்க ராக் இசை பாடகர் புரூஸ் ஸ்பரிங்ஸ்டீன் இசை நிகழ்ச்சிக்கு தான் இப்படி பெரும் கூட்டம் கூடும் இதற்கு பின்னர் அரங்கமே நிரம்பும் அளவு கூட்டம் கூடியது பிரதமர் நரேந்திர மோடியை காண்பதற்குத்தான் என்று அந்த நாட்டுப் பிரதமர் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்தப் பாடகரை அவருடைய ரசிகர்கள் தி பாஸ் என்று அழைப்பார்கள் ஆனால் இன்று உண்மையா பிரதமர மோடி தான் என்று ஆசிரியர் பிரதமர் ஆண்டனி தெரிவித்திருக்கிறார்.
ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றுக் கொள்ள சென்ற பிரதமர் நரேந்திர மோடி அதனை தொடர்ந்து, பப்புவா நியூகினியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
நேற்று ஆஸ்திரேலியாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கலை நிகழ்ச்சியுடன் கூடிய பிரம்மாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து. இந்தியர்கள் அதிகம் வாழும் ஹாரிஸ் ஃபார்க் என்ற பகுதிக்கு வீட்டில் இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டு அதிகாரப்பூர்வமாக அந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது