வாரக்கணக்கில் நீடித்த கடுமையான எல்லை மோதல்களைத் தொடர்ந்து, சனிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் (உள்ளூர் நேரம்) உடனடியாக அமலுக்கு வரும் வகையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கம்போடியாவும் தாய்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன.. இந்த வன்முறை மோதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொது எல்லையில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் பதட்டங்களைத் தணித்து, அமைதியான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் […]
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.. பச்சரிசி, சர்க்கரை, கருப்பு ஆகியவற்றுடன் சில ஆண்டுகளில் ரொக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோழித்தீவனம் ஏற்றி சென்ற லோடு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. லோடு லாரி பள்ளத்திற்குள் பாய்ந்ததில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மற்றும் ஓட்டுநர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மாடுகள் சாலையை கடந்த போது லாரியில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. […]
தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க அரங்கில் நடந்தது.. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் பலர் தவெகவில் இணைந்தனர்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன் “ அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் வரும்.. ஆனால் வேகம் இருக்காது.. ஆனால் ஆர்ப்பரிக்கும் இந்த கூட்டம் தவெகவின் தலைவர் விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என்று கூடுகிறது.. […]
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் மற்றும் சஃபாரி மாடல்களின் பெட்ரோல் வகைகளை அறிமுகப்படுத்தி இந்திய வாகனத் துறையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு எஸ்யூவி-களும் இப்போது புதிய 1.5 லிட்டர் ஹைபீரியன் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வரவுள்ளன. சுவாரஸ்யமாக, இதே எஞ்சின் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா சியரா மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய எஞ்சின் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நிரூபிக்க, நிறுவனம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூருக்கு […]
சிவகாசி அருகே வீட்டின் கேட் இடிந்து விழுந்ததில் இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட்டில் கமலிகா, ரிஷிகா என்ற சிறுமிகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேட் இடிந்து விழுந்ததால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.. 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கேட் சுவருடன் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
இந்தியா 2025-ஆம் ஆண்டுக்குள் தனது மின்சார வாகன உள்கட்டமைப்பை பெருமளவில் விரிவுபடுத்துவதன் மூலம் எரிசக்தித் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான சார்ஜிங் நிலையங்களை அரசாங்கம் அமைத்துள்ளது. மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட விவரங்களின்படி, ஃபேம்-2 திட்டத்தின் கீழ் 8,932 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தங்களின் சொந்த நிதியில் மேலும் 18,500 […]
சிலருக்குச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுக்கும் உணர்வு ஏற்படும். இதைச் சாதாரணப் பசி என்று புறக்கணிக்கக் கூடாது. அதீதப் பசிக்குப் பின்னால் சில தீவிரமான உடல்நலப் பிரச்சனைகள் மறைந்திருக்கலாம். மருத்துவத் துறையில், இந்த நிலை ‘பாலிஃபேஜியா’ (polyphagia) என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய்: அதீதப் பசிக்கு நீரிழிவு நோயே முக்கியக் காரணமாகும். நமது உடல் உணவை குளுக்கோஸாக மாற்றுகிறது. இரத்தத்தில் உள்ள இந்த குளுக்கோஸ் செல்களைச் சென்றடைய […]
உலகம் முழுவதும் டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது, ஆனால் பிரிட்டனில் உள்ள இந்த ஒரு இடத்தில் மட்டும், டிசம்பர் 25-க்கு பதிலாக ஜனவரியில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இந்த தனித்துவமான பாரம்பரியம் ஒரு சிறிய தீவில் காணப்படுகிறது, மேலும் இந்த கொண்டாட்டத்திற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. பிரிட்டனின் ஷெட்லாந்து தீவுகளுக்கு மேற்கே 20 மைல் தொலைவில் அமைந்துள்ள ஃபோலா தீவில் ஜனவரி 6 ஆம் தேதி […]

