புத்தாண்டு அன்று பலர் பல தீர்மானங்களை எடுக்கிறார்கள். அந்த வகையில் நீங்களும் பணக்காரர் ஆக வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தால், 2026-ல் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். 2026 தொடங்குவதற்கு முன்பே, நீங்கள் சில நிதித் திட்டமிடல்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். 2025-ஆம் ஆண்டின் இறுதியில் எந்தெந்த விஷயங்கள் நன்றாகச் சென்றன? நிதி ரீதியாக நீங்கள் எங்கு சிரமப்பட்டீர்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். புத்தாண்டு […]
தினமும் நடப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், வழக்கமான நடைப்பயணத்துடன் ஒப்பிடும்போது, ’பிரமிட் நடைப்பயிற்சி’ எனப்படும் ஒரு புதிய முறை தற்போது உடற்பயிற்சி உலகில் பெரும் பிரபலமடைந்து வருகிறது. இந்த முறையில் நடப்பது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பிடிவாதமான வயிற்று கொழுப்பை வேகமாக எரிக்கவும் உதவுகிறது. இந்த பிரமிட் நடைப்பயணம் என்றால் என்ன? அதன் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.. பிரமிட் நடைப்பயணம் என்றால் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
சாப்பிடுவதற்கு எளிதானது. மேலும் மேலும் சாப்பிடத் தூண்டும் சுவை… இதுதான் பீட்சாவின் ரகசியம். பீட்சா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். சீஸ், சாஸ் மற்றும் டாப்பிங்ஸுடன் கூடிய இந்த சுவையான உணவு பலரைக் கவர்கிறது. இருப்பினும், பீட்சாவை அடிக்கடி சாப்பிடுவது நமது உடலுக்கு நல்லதல்ல. இதில் அதிக கலோரிகள், நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் உள்ளன, இது இதயம், செரிமான அமைப்பு மற்றும் சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளை […]
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் கொடிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று அறிவித்தார். டொனால்ட் ட்ரம்ப், நைஜீரியாவில் கிறிஸ்தவ சமூகத்துக்கு “உயிர்வாழ்தலுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது” என கடந்த அக்டோபர் இறுதி முதல் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். நைஜீரியாவில் கிறிஸ்தவர்களை குறிவைத்து நடைபெறும் வன்முறைகளை அந்த நாட்டின் அரசு தடுக்க தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால், மேற்கு […]
இந்திய ரயில்வேயின் நாடு தழுவிய கட்டண உயர்வைத் தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.. இதன் மூலம் இன்று முதல் ரயில் பயணம் விலை உயர்ந்ததாக மாற உள்ளது. இது 6 மாதங்களுக்கும் குறைவான காலத்தில் செய்யப்படும் இரண்டாவது கட்டண உயர்வு ஆகும். கடைசியாக இந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டண உயர்வு செய்யப்பட்டது. அது ரயில்வே அமைச்சகத்திற்கு ரூ.700 கோடி வருவாயை ஈட்டித் […]
இந்த ஆண்டு டிசம்பர் 15 வரை தேசிய தலைநகரான டெல்லியில் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 23,340 பேரில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். இந்த தகவலை டெல்லி காவல்துறை வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. காணாமல் போன மொத்த நபர்களில், 14,166 பேர் பெண்கள், இது சுமார் 61 சதவீதமாகும், அதே நேரத்தில் 9,174 பேர் ஆண்கள் அல்லது சுமார் 39 சதவீதம் பேர் என்று அந்தத் தரவுகள் […]
இந்திய ராணுவம் வீரர்கள் மற்றும் அதிகாரிகளால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பான தனது கொள்கைகளைத் திருத்தியுள்ளது. இந்த புதிய மாற்றங்களின் கீழ், ராணுவ வீரர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்களைப் பார்ப்பதற்கும் கண்காணிப்பதற்கும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களால் லைக் செய்யவோ, கருத்துத் தெரிவிக்கவோ அல்லது பதிவுகளை உருவாக்கவோ முடியாது. ராணுவத்திற்கான டிஜிட்டல் செயல்பாடுகள் தொடர்பான தற்போதுள்ள அனைத்து விதிகளும் நடைமுறையில் இருக்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இந்த புதிய உத்தரவின் […]
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 இந்த தேதி இன்று கூட கோடிக்கணக்கான மக்களின் நினைவுகளில் நீங்காத வடுவாக நிலைத்து நிற்கிறது.. ஆசியாவின் பல நாடுகளையும் இந்திய பெருங்கடல் கரையோரப் பகுதிகளையும் உலுக்கிய உலக வரலாற்றின் மிகப்பெரிய இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக அந்த சுனாமி பதிவானது. சுனாமியின் இந்த கோர தாண்டவத்தால் சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோனதுஆம்.. உலகில் ஒரே நாளில் இத்தனை ஆயிரம் உயிர்கள் பலிகொண்ட இயற்கை […]
வங்கதேசத்தின் ராஜ்பாரி மாவட்டத்தில் நேற்றிரவு ஒரு இந்து நபர் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. மத நிந்தனைக் குற்றச்சாட்டுகளுக்காக 27 வயதான தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கும்பல் தாக்குதல் புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் நடந்தது. ஒரு நபர் உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், காவல்துறை சம்பவ இடத்திற்கு […]

