தமன்னா நடனத்துடன் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் நேற்று முன் தினம் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான காவாலா பாடலின் ப்ரொமோ வீடியோ கடந்த ஜூன் 03ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் பாடலின் ப்ரொமோ வீடியோ நேற்று முன் தினம் வெளியாகி கலக்கல் ஹிட் அடித்து இணையத்தை வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இந்தப் பாடலில் […]
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் டூவீலர் விற்பனையை செய்து வருகிறது. குறிப்பாக ஸ்கூட்டர் செக்மெண்டில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தான் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் பெட்ரோல் ஸ்கூட்டராக இருக்கிறது. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தனது பிராண்டில் புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்கான டீசரை தற்போது வெளியிட்டுள்ளது அந்த டீசரில் ஸ்கூட்டரின் முன்பக்க ஹெட்லைட் டூம் பகுதி மட்டும் இருப்பது போல காட்சியளிக்கிறது. இதில் இது குறித்து […]
வரும் 14ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்திய மக்கள் பார்வை எல்லாம் இஸ்ரோ பக்கம் திரும்பியுள்ளது. நிலவில் தன் தடத்தை பதித்த ஒரு சில நாடுகளில் இந்தியாவும் தற்போது இணைய போவதை நினைத்து இந்திய மக்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த வரலாற்று முக்கியமான நிகழ்வை […]
திருமண உறுதிமொழியின் அடிப்படையில், இருவரும் சம்மதித்து உடல் உறவு கொண்ட பின், சில காரணங்களால் திருமணத்தை நிறைவேற்ற முடியாமல் போனால், அதனை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என்று ஒரிசா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. புவனேஸ்வரைச் சேர்ந்த ஒருவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு வழக்கை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு, அவரது தோழியான ஒரு பெண்ணால் முன்வைக்கப்பட்டுள்ளது. நல்லெண்ணத்தில் கொடுத்த அளித்து […]
ஸ்தூலம், சூட்சுமம், காரணம் ஆகிய மூன்று முறையிலும் அழகிய திருவடிவம், மகாமேரு, பீஜ மந்திர முறையில் வழிபடப்படுபவள் இந்த தேவி. 16 வகைப் பேறுகளையும் அளிப்பதால் இவள் சோடஷி எனப்படுகிறாள். பிரபஞ்ச மையத்தில் அமிர்த சாகரத்தின் மத்தியில் ஸ்ரீபுரம் எனும் ஸ்ரீசக்கர வடிவ நகரில், ராஜதர்பாரில் ரத்ன சிம்மாசனத்தில் ஸ்ரீஸ்ரீலலிதா திரிபுர ஸுந்தரி வீற்றிருக்கின்றாள். அவளைச் சூழ்ந்து அவளது மந்திரியான மாதங்கி, படைத் தளபதிகளான அஸ்வாரூடா, வராகி போன்ற சப்த […]
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்தப் படத்தில், நயன்தாரா, ப்ரியாமணி, வில்லனாக விஜய் சேதுபதி, யோகிபாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. கௌரவ வேடத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை, ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரிகான் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான […]
ஆஸ்திரேலியாவில் நர்சிங் பயின்று வந்த இந்திய மாணவியை அவரின் முன்னாள் காதலன் உயிருடன் புதைத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ல் நடந்ததாகக் கூறப்படும் இந்த கொடூர கொலை தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் தற்போது நீதிமன்ற விசாரணையின்போது வெளிவந்துள்ளன. இதில் கொலை செய்யப்பட்ட பெண் ஜாஸ்மீன் கவுர் (வயது 21) எனவும், கொலை செய்த நபர் தாரிக்ஜோத் சிங் (23) என்றும் தெரியவந்திருக்கிறது. ஜாஸ்மீன் கவுரும், தாரிக்ஜோத் […]
பணம் சம்பாதிக்கும் பேராசையில் இருக்கும் ஒரு இளைஞனது வாழ்க்கை, ஒருவரது வருகையால் எப்படி மாறுகிறது என்பதே பம்பர்’ படத்தின் கதை. தூத்துக்குடியில் வசிக்கும் புலிப்பாண்டி (வெற்றி) சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து வாழ்கையை ஓட்டுகிறார். பணம் இல்லாததால் தன்னை யாரும் மதிப்பதில்லை என நம்பும் அவர் எந்த வழியிலாவது பணம் சம்பாதிக்கும் வெறியில் இருக்கிறார். பெரிய சம்பவம் ஒன்றை செய்து பெரிதாக செட்டில் ஆகிவிட வேண்டும் எனக் காத்திருப்பவருக்கு, […]
சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க நினைத்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது. வேப்பமரம்: அவள் […]
மயிலாடுதுறை மாவட்டம் லால் பகதூர் சாஸ்திரி நகரில் அமைந்துள்ளது பழமையான பிரசித்தி பெற்ற மன்மத காருண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குடமுழுக்கு விழா செய்ய அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து திருப்பணிகள் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் திருப்பணி பணிகள் அனைத்தும் நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான தேதி குறிக்கப்பட்டு கடந்த 3ஆம் தேதி கும்பாபிஷேக விழா விக்னேஸ்வரர் பூஜையுடன் […]