கவலை, பயம் மற்றும் மனச்சோர்வு என்பது குழந்தைகளுக்கும் உண்டு. அது தெரியாமலேயே பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளிடம் நடந்து கொள்வது உண்டு. நாம் குழந்தைகளுக்கு கற்பிக்கக் கூடிய முக்கியமான திறன்களில் ஒன்று கவலையை எப்படி கையாள்வது. கவலை அவர்களின் மன நலத்தை மட்டுமல்ல அவர்களின் உடல் நலத்தையும் பெரிய அளவில் பாதிக்கிறது. எனவே குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப அவர்கள் எந்த மாதிரியான விஷயங்களில் கவலைப்படுகிறார்கள் என்பதை பெற்றோர்களாகிய நாம் அறிந்து வைத்திருப்பது […]
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் SAFF சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று இரவு நடந்த அரையிறுதி போட்டியில் லெபனான் மற்றும் இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின.போட்டி தொடங்கியது முதலே இந்தியா- லெபனான் அணிகள் எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுப்பாட்டத்தில் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. அதன் பிறகு ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது, […]
ஜூன் மாதத்துக்கான மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.61 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 11.7 சதவீதம் வரை அதிகளவில் ஜிஎஸ்டி வரி வசூல் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நடைமுறையில் உள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு நாடு முழுவதும் இந்த ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது. பல வரி விதிப்பு முறைகளை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி […]
கடந்த வாரம் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு டெலிவரிபாய், பெண் ஒருவருக்கு பீட்சா டெலிவரி செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட மறுநாள் அப்பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தன்னை அப்பெண்ணிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த இளைஞர், “நேற்று உங்களுக்கு பீட்சா கொடுக்க வந்தது நான் தான். உங்களை நான் விரும்புகிறேன்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞரின் குறுஞ்செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்த பெண் இணையத்தில் […]
ஊடகத் துறையில் அச்சுப் பதிப்பு மூலம் வெளிவந்த நாளிதழ்கள் நிறுத்தப்பட்டு, அவை டிஜிட்டல் வடிவில் வெளிவர ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் கடந்த காலங்களில் பல நீண்டகால பத்திரிகைகள் தனது அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளன. இந்தப் பட்டியலில் 320 ஆண்டுகள் பழைமையான ’வீனர் ஜெய்டுங்’ (Wiener Zeitung) என்ற செய்தித்தாளும் தன்னுடைய அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளது. வியன்னாவைத் தலைமையிடமாகக் கொண்டு ’வீனர் ஜெய்டுங்’ (Wiener Zeitung) என்ற செய்தித்தாள் வெளியாகி வந்தது. […]
பிரான்ஸ் நாட்டின் புறநகர் பகுதியான நான்டெர்ரேயில் 17 வயது இளைஞர் நஹேல் என்பவர் தனது வாடகை காரில் சென்று கொண்டிருந்த போது காவல்துறையினரால் சுடப்பட்டது பிரான்ஸ் மக்களை போராட்டக் களத்திற்கு இழுத்துள்ளது. நான்டெர்ரேயின் அவென்யூ ஜோலியட்-கியூரி என்ற பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் ஆவணங்களை சரிபார்ப்பதற்காக காரை நிறுத்தியபோது காரை நிறுத்தாமல் காவல்துறையினர் மேல் ஏற்றுவது போல் சென்றார். […]
மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இனக்கலவரமும் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதுவும் பயன் தந்ததாக தெரியவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது. மாநில காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பப்பட்டது. ஆனால், வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட […]
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்த சூழலில், எதிர்க்கட்சியாக உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், கட்சியை உடைத்து பாஜக – சிவசேனா கூட்டணியில் இணைந்துள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வந்த அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, அஜித் பவார் உள்பட தேசியவாத காங்கிரஸ் […]
மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும், வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது விண்டோஸ்-கான புதிய வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒரே நேரத்தில் 32 பேருடன் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். ஏற்கனவே 8 பேருடன் வீடியோ கால் […]
தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாகச் சென்னையிலிருந்து நெல்லை வரை புதிய ரூட்டில் ரயில் இயக்கப்படும் என்ற தகவல் உறுதியாகி உள்ள நிலையில் தற்போது அந்த ரயிலுக்கான டிக்கெட் விலை விபரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் வரிசையாக ஒவ்வொரு புதிய ரூட்டிலும் வந்தே பாரத் ரயிலை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் தான் இந்தியாவிலேயே மிக வேகமாகச் செல்லக்கூடிய ரயிலாக இருக்கிறது. மணிக்கு 160 […]