தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதல்வர் ஆணவக் கொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்று கூறினார்.. அப்போது பேசிய அவர் “ ஆணவ படுகொலைக்கு சாதியை தாண்டி பல காரணங்கள் உள்ளன.. ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.. ஆணவக் கொலைக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது.. அவர்கள் எதன் பொருட்டும் தப்பி ஓடக் கூடாது எனவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு […]
இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, இருளிலிருந்து ஒளிக்கு மாறுவதைக் குறிக்கிறது. வேத ஜோதிடம் மற்றும் வாஸ்து கொள்கைகளின்படி, தீபாவளிப் பண்டிகையின் புனித நாளில் சில பொருட்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. இது நிதி சிக்கல்களைத் தடுத்து செல்வத்தை ஈர்த்து வருகிறது. ஜோதிடர்கள் வழங்கிய தகவலின்படி, லட்சுமியைப் பிரியப்படுத்த தீபாவளிப் பண்டிகையின் புனித நாளில் எந்த 5 பொருட்களை வாங்குவது சிறந்தது என்று பார்க்கலாம்.. […]
ஜோதிடத்தின்படி, செல்வம், செழிப்பு, செல்வம் மற்றும் மகிமையை வழங்கும் சுப கிரகமான சுக்கிரன், தீபாவளி பண்டிகைக்குப் பிறகு தனது ராசியை மாற்றுவார். இந்த முக்கிய கிரகப் பெயர்ச்சி நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறும், அப்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் நுழைந்து நவம்பர் 25 வரை அங்கேயே இருப்பார். திடீர் நிதி ஆதாயம் சுக்கிரன் துலாம் ராசிக்காரர்களின் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால், அதன் செல்வாக்கு 12 […]
தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று தேர்தல் ஆணையம் கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. இந்த வழக்கை தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையமும், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்து வந்த நிலையில் […]
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. ஆனால் பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. சென்னையை பொறுத்த வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்கள் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது.. மேலும் திருச்சி, […]
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆணவப் படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவன் பிறந்த மண்ணில் சாதி இல்லை என்பதே அடிப்படையாக இருந்தது.. ஆனால் இடைக்காலத்தில் புகுந்தவர்களால் சாதி வேறுபாடு வந்தது.. அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை உருவாக்கவே பல இயக்கங்கள் போராடி மாற்றம் கொண்டு வந்தன.. திராவிட இயக்கங்களின் […]
பாஜக தலைமையிலான குஜராத் அரசு, கிரிக்கெட் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா உட்பட 26 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை இன்று அறிவித்தது. முதல்வர் பூபேந்திர படேலைத் தவிர ஒட்டுமொத்த அமைச்சரவையும் நேற்று ராஜினாமா செய்த நிலையில் இன்று புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. ரிவாபா ஜடேஜாவைத் தவிர, ஸ்வரூப்ஜி தாக்கூர், பிரவென்குமார் மாலி, ருஷிகேஷ் படேல், தர்ஷ்னா வகேலா, குன்வர்ஜி பவாலியா, அர்ஜுன் மோத்வாடியா, பர்ஷோத்தம் சோலங்கி, ஜிதேந்திர […]
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் அடுத்தடுத்து பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இருமல் மருந்தை உட்கொண்ட 25 பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்திற்கு காரணமான மருந்து, ‘கோல்ட்ரிப்’ (Coldrif) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயிர்க்கொல்லி மருந்தை தயாரித்த ஸ்ரீசன் பார்மா (Srisan Pharma) நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் […]
‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தின் வலிமையை உலகம் முழுவதும் புரிந்துகொண்டது. நமது விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி பல பயங்கரவாத முகாம்களை அழித்தது. அதன் பிறகு, ஆத்திரமூட்டும் செயல்களைச் செய்த பாகிஸ்தான், தொடர்ச்சியான தாக்குதல்களால் அச்சுறுத்தப்பட்டு, மூன்று குளங்களை நீர்த்துப்போகச் செய்தது. இது இந்திய ராணுவம், குறிப்பாக விமானப்படை எவ்வளவு வலிமையானது என்பதை வெளிப்படுத்தியது. இருப்பினும், இந்திய விமானப்படை சமீபத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளது. […]

