கொரோனா பாதிப்பு தன்மை வீரியமாக இல்லை என்பதால் தற்போதைய நிலையை 4-வது அலையாக கருத முடியாது என்று மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.. தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.. அப்போது, கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அரசின் நிலைபாட்டை அறிய விரும்புவதாக கூறிய இபிஎஸ், தேவையான மருந்துகள் கையிருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவற்றில் […]

ஆட்சிகள் மாறினாலும் மக்கள் நல பணியாளர் திட்டம் தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்ப வழங்கி உள்ளது.. மக்கள் நல பணியாளர்கள் பிரச்சனை என்பது தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது.. திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலப்பணியாளருக்கு பணி கொடுக்கப்படு.. அதிமுக ஆட்சிக்கு வரும் போது அவர்களின் பணி நீக்கப்படும்.. இதுவே தமிழகத்தில் இருந்து வரும் நடைமுறையாக உள்ளது.. அப்படி கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக […]

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.. கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. இந்த வழக்கில் 6 இடங்களை தவிர்த்து தமிழகத்தின் 44 இடங்களில் பாதுகாப்புடன் உள் அரங்கு கூட்டமாக நடத்த தனி நீதிபதி […]

உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரையின் இருப்பு குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் சர்க்கரை விலை புதிய உச்சத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய சர்க்கரை வர்த்தக சங்கம் 2022-23 ஆண்டுக்கான சர்க்கரை உற்பத்தி மதிப்பீட்டை 34.5 மில்லியன் டன்னிலிருந்து 33.5 மில்லியன் டன்னாக (மெட்ரிக் டன்) குறைத்துள்ளதாக உணவுச் செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார். மகாராஷ்டிராவில் காலம் தவறி பெய்த பருவமழை, எத்தனால் உற்பத்திக்கு சர்க்கரையை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் […]

நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்று தண்ணீர்.. தண்ணீர் இல்லாமல் வாழும் வாழ்க்கையை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியம். போதுமான தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.. எனவே, நீரேற்றத்தை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியம்.. ஏனெனில் நீரிழப்பு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உடலின் […]

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.. அதிக காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர், டாக்டர் விபின் வசிஷ்தா இதுகுறித்து பேசிய போது “ 6-11 மாத வயதுடைய குழந்தைகளிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது, பெரும்பாலான குழந்தைகளுக்கு மூச்சுக்குழாய் அழற்சியின் அம்சங்களுடன் மிதமான […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,040க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் தங்கம் விலை […]

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பரவல் உலகம் முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்தியது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் புதிதாக 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.. கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 35,199 ஆக உள்ளது, தினசரி நேர்மறை விகிதம் 6.91 சதவீதமாக உள்ளது. […]

ஆம் ஆத்மி கட்சியை (ஏஏபி) தேசியக் கட்சியாக அங்கீகரிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களின் செயல்திறன் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் புதுப்பிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது.. அதன்படி தற்போது ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.. ஆனால் அதே நேரத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி), மேற்கு வங்க முதல்வர் மம்தா […]

கொரோனா பரவல் அதிகரிப்புக்கு மத்தியில், ஹரியானா மாநில அரசு, பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் என்று அறிவித்துள்ளது.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 5000-ஐ தாண்டி பதிவாகி வருகிறது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. […]