செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 2000 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் காலை செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ […]

செங்கோட்டையனின் ஆதரவாளரான சித்துராஜ், பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் காலை செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் […]

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மீன்வளர்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து அரசு மானியத் திட்டங்களை பெற்று பயனடைந்து மீன் உற்பத்திப் […]

ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான நேற்று முன்தினம் ( 04.09.2025) வியாழக்கிழமை கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பத்திரப் பதிவுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான 04.09.2025 வியாழக்கிழமை அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு […]

இஸ்லாமிய மாணவ மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தலா ரூ.36 லட்சம் வீதம் ஆண்டுக்கு 10 பேருக்கு வழங்க ரூ.3.60 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. வெளிநாடு சென்று படிக்க விரும்பும் சிறுபான்மையின மாணவர்களுக்கு தமிழக அரசு உதவி தொகை வழங்குகிறது. சிறுபான்மையின மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்புகளைப் படிப்பதற்கு உதவும் புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதிதிராவிடர் […]

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2.0-ன் கீழ், தொலைதூர மக்களை சென்றடையும் பிரச்சாரமான “அங்கிகார் 2025” தொடங்கப்பட்டுள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2.0-ன் கீழ், தொலைதூர மக்களை சென்றடையும் பிரச்சாரமான “அங்கிகார் 2025”- ஐ மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லால், செப்டம்பர் 4 அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். அங்கிகார் 2025 பிரச்சாரத்தின் நோக்கமானது, நாடு முழுவதும் பிரதமரின் நகர்ப்புற […]

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வியாழக்கிழமை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான […]

ஹிமாசல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ளனர்‌ என மாநில அவசரகால நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. இமயமலையையொட்டிய ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பலத்த மழையால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டுள்ளன. அண்டை மாநிலமான பஞ்சாபும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-இல் இருந்து இதுவரை 45 மேகவெடிப்புகள், 95 பெருவெள்ளங்கள், 132 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு, […]

நான்காண்டுகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2,84,091 குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 07.05.2021 அன்று ஆட்சி பொறுப்பேற்றது முதல் நாளது வரை ஏழை, எளியோர், மகளிர், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழில் முனைவோர்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், திருநங்கைகள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் […]

தமிழகத்தில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாமல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பேசிய அவர்: ஆண்டிபட்டி தொகுதிக்கு என்று தனி வரலாறு இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்று அரசியல் வரலாற்றிலேயே […]