ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்களை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஒரே பாலின திருமணத்தை நாட்டின் நெறிமுறை மற்றும் சமூக […]

வரும் மார்ச் 24-ம் தேதி தி.நகரில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சிவஞானம் சாலை, சென்னை 600 017 என்ற முகவரியில் 24.03.2023 அன்று மாலை 4.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது புகார்களை கையொப்பமிட்ட கடிதத்தில் விவரங்களோடு-பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), […]

தமிழக முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. தமிழக பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு இன்று முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் மாணவர்களுக்கான தேர்வினை எழுதுவதற்கான விதிமுறைகளையும் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் விடைத்தாள் மற்றும் முகப்புத் தாள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வின் போது விடைத்தாளில் […]

பொதுத் தேர்வு பணிகளில் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களை நியமனம் செய்ய கூடாது என்று அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுத்துறை மாவட்ட முதன்மைக்கல்வி அலுலவர்களுக்கு வழங்கப்பட்ட உள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், “தேர்வு மையத்தின் முக்கியப் பொறுப்பான முதன்மைக் கண்காணிப்பாளர் பணியில் தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களையோ அல்லது அரசுப் பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களையோ தேர்வு மைய முதன்மைக் […]

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பருவகால வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. H3N2 வகை காய்ச்சல் தொடர்பாகவும், இணை நோய்கள், உயிரிழப்புகள் குறித்தும் சுகாதார அமைச்சகம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இணை நோய்களைக் கொண்ட சிறு குழந்தைகள் மற்றும் முதியோர் இந்த பருவகால வைரஸ் காய்ச்சலால் அதிகம் பாதிக்கபடக்கூடியவர்களாக உள்ளனர். H3N2 காய்ச்சலால் […]

இந்திய உணவுக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட 5-வது ஏலத்தில் 11.88 லட்ச மெட்ரிக் டன் அளவிலான கோதுமை விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோதுமை மற்றும் ஆட்டா விலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாராந்திர அளவில் மின்னணு ஏலங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய உணவுக்கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட 5-வது மின்னணு ஏலத்தில் நாடு முழுவதிலும் உள்ள 23 பிராந்தியங்களில் இருக்கின்ற 657 பண்டகச்சாலையில் […]

நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர் மற்றும் கைவினைக் கலைஞர்களின் தயாரிப்பில் உருவான பொருட்களைக் காட்சிப்படுத்தும் பிரத்தியேக நிகழ்ச்சியான ‘திவ்ய கலா மேளா’வை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இன்று முதல் 21-ம் தேதி வரை நடத்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நடத்த உள்ளது. ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளின் கைவினை, கலைப் […]

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 14-ம் தேதி வரை தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான […]

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஆர்.துருவநாராயணா காலமானார். கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியுமான ஆர் துருவநாராயணா காலமானார். அவருக்கு வயது 61. மூத்த காங்கிரஸ் தலைவரான இவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் நேற்று காலை மைசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துருவநாராயணா 15 […]

தருமபுரி மாவட்டத்தில்‌ 12-ஆம்‌ வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது. பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ சார்பில்‌, சென்னை அரசுத்‌ தேர்வுகள்‌ துறையால்‌ நடப்புக்‌ கல்வியாண்டில்‌ 12-ம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுகள்‌ வருகின்ற 13.03.2023 திங்கட்கிழமை தொடங்கி 03.04.2023 திங்கட்கிழமை வரை தமிழகம்‌ முழுவதும்‌ நடத்தப்படுகின்றது. இதனை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்திலும்‌ 12-ம்‌ வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள்‌ தொடங்க உள்ளது. தருமபுரி மாவட்டத்தில்‌ 102 அரசு மேல்நிலைப்பள்ளிகள்‌, 4 அரசு […]