ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் ஹரியானா மாநிலம் குருகிராமில் மாடியில் இருந்து விழுந்து நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக குருகிராம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜ் கூறுகையில், நேற்று மதியம் 1 மணியளவில் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. ரமேஷ் அகர்வால், 20-வது மாடியில் இருந்து விழுந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த ரமேஷ் அகர்வாலின் மனைவி, மகன் ரிடேஷ் அகர்வால் மற்றும் ரிடேஷின் […]

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA தேர்வு மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எம் .இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலை […]

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் மகளிரின் தாக்கத்தை எடுத்துரைக்கும் வகையில், தூய்மையை முன்னெடுத்துச் செல்லும் மகளிருக்கான சிறப்பு விருதை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிமுகப்படுத்தினார். இதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 5, 2023 வரை அனுப்பலாம். சுய உதவிக்குழுக்கள், சிறு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், மகளிர் தலைவர்கள் மற்றும் தூய்மைப்பணி சாதனையாளர்கள் ஆகியோர் […]

ICICI Prudential Life Insurance காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Sr Manager, Unit Sales Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் 3 ஆண்டுகள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் […]

மின்துறையின் தேவையை நிறைவேற்றும் வகையில் நிலக்கரி விநியோகத்திற்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளித்துள்ளது. மின்துறையின் தேவையை நிறைவேற்றும் வகையில் நிலக்கரி விநியோகத்திற்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளிக்கிறது. நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-ஃபிப்ரவரி) வரை நாளொன்றுக்கு 408 அடுக்குகள் நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 344 அடுக்குகள் அனுப்பப்பட்டிருந்தது. அதாவது நாளொன்றுக்கு 64 அடுக்குகள் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 2023 அன்று, நாளொன்றுக்கு 426.3 அடுக்குகள் அனுப்பப்பட்ட நிலையில் […]

தென் தமிழக மாவட்டங்களில் 12-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 12-ம் தேதி வரை தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான […]

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில்‌, பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய பல முயற்சிகள்‌ மற்றும்‌ சீர்திருத்த நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழக பேருந்துகளில்‌ பயணிக்கும்‌ பயணிகள்‌ மற்றும்‌ பொதுமக்களின்‌ எதிர்பார்ப்புகளை கண்டறியவும்‌, அவர்களின்‌ குறைகள்‌ மற்றும்‌ புகார்களைத்‌ தீர்க்க நடவடிக்கை எடுக்கவும்‌, ஒருங்கிணைந்த பயணிகள்‌ […]

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற இலவச வகுப்பு நடத்தப்படும் என அரியலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் நிறுவனம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சித் திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு […]

ஆராய்ச்சி மானியம் மற்றும் நிதிக்கான சிறப்பு மகளிர் இணையதளத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஆராய்ச்சி மானியம் மற்றும் நிதிக்கான சிறப்பு மகளிர் இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்படும். அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும். பெண் விஞ்ஞானிகள் மட்டுமே மானியம் பெறுவதற்கு தகுதி […]

பிரதான் மந்திரி க்ரிஷி சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும். மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பட்ஜெட் 2023 ஐ தாக்கல் செய்தார். மாநில பட்ஜெட் தாக்கலின் போது, பட்னாவிஸ், பிரதான் மந்திரி க்ரிஷி சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும். மீதமுள்ள 6,000 ரூபாயை பயனாளிகளின் குடும்பங்களுக்கு […]