மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழாவையொட்டி இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா 26-ம் தேதி சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி 26-ம் […]

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குஜராத் – வடக்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் […]

சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 29-ம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கே.கே.நகர் கோட்டத்தில் வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய பகுதிகள், தாம்பரம் கோட்டத்தில் செம்பாக்கம், சேலையூர், ராஜகீழ்பாக்கம், கவுரிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் வருகிற 29.7.2025, செவ்வாய்க்கிழமை […]

நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்​டில் அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் முதுகலை படிப்பு சேர்க்​கைக்​கான ஆன்​லைன் விண்​ணப்​பப் பதிவுக்கான காலஅவ​காசம் ஜூலை 15-ம் தேதியுடன் முடிவடைந்​த​து. முதல்​வரின் அறி​வுறுத்​தலின் பேரில், மாணவர்​களின் நலன் கருதி கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்​டிக்​கப்​படு​கிறது. இன்னும் […]

குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் இன்று மாலைக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 3,935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு, கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 13.48 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து […]

நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் கால்நடை துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ‘நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணை கொலை செய்யலாம். இந்த பணியை பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் செய்ய வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் சரியான முறையில் அடக்கம் […]

2026 பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்ய ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் ஆகும். 2026 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026க்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பது 2025, மார்ச் 15 அன்று தொடங்கியது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசி நாள் 2025 ஜூலை 31 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளம் (https://awards.gov.in) வாயிலாக மட்டுமே பெறப்படும். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய […]

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியினை ஐ.பி.பி.எஸ் (IBPS) அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு கனரா வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்கிறது. இதில் தற்போது […]

அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் நாளை காலை 11.00 மணியளவில் ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சலகங்களுடன் தொடர்புடைய ஓய்வூதியதாரர்கள் ஏதாவது புகார்கள் இருப்பின் அவற்றை தபால் மூலமாகவும், மின்னஞ்சல் (dochennaicitycentral@indiapost.gov.in) […]

பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016 காரிஃப் பருவத்திலிருந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்குத் தேவை சார்ந்ததாகவும் தன்னார்வ அடிப்படையிலானதும் ஆகும். இருப்பினும், கடன் பெறாத விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் உள்ளிட்ட விவசாயிகளின் காப்பீட்டுத் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பதிவு செய்யப்பட்ட மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 2022-23 […]