தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளன. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், கூடுதலான பயணிகள் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு, போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது. வார இறுதி நாட்களான நேற்று தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு 900 […]

சமையல் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவை நுகர்வோருக்கு விரைவாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் கீழ்நோக்கிய போக்கில் உள்ளன, இது இந்தியாவில் சமையல் எண்ணெய் துறையில் சாதகமான சூழ்நிலையை அளிக்கிறது. உலகளாவிய விலை வீழ்ச்சிக்கு மத்தியில் சமையல் எண்ணெய்களின் சில்லறை விலையை மேலும் குறைப்பது குறித்து ஆலோசிக்க, முன்னணி […]

தமிழ்நாடு அரசு எஸ்‌.சி. மற்றும்‌ எஸ்‌.டி. பிரிவு தொழில்‌ முனைவோர்களுக்கு சிறப்பு திட்டமாக அண்ணல்‌ அம்பேத்கர்‌ வெல்லும்‌ தொழில்‌ முனைவோர்‌ பிசினஸ்‌ சாம்பியன்ஸ்‌ திட்டத்தை தமிழக அரசு இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில்‌ சட்டமன்றத்தில்‌ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ ஆர்வமுள்ள எஸ்‌.சி. மற்றும்‌எஸ்‌.டி. பிரிவு தொழில்‌ முனைவோர்‌ தொடங்கவிருக்கும்‌, உற்பத்தி, வணிகம்‌ மற்றும்‌ சேவை சார்ந்த நேரடி வேளாண்மை தவிர்த்த தொழில்‌ திட்டங்களுக்கும்‌ வங்கி கடன் உதவியோடு மானியம்‌ வழங்கப்படும்‌. இத்திட்டத்தின்‌ […]

மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணுப்பிரியா, கூலித்தொழிலாளியான தமது தந்தையின் குடிப்பழக்கத்தால் தமது குடும்பத்தின் நிம்மதி குலைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தமது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி […]

திருக்குறள் முற்றோதல்‌ செய்யும்‌ மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வித் திறனையும் தமிழ் மைதான பற்றியும் அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இலக்கியங்கள்‌ அனைத்திலும்‌ சிறந்ததும்‌ உன்னதமானதும்‌ மனித குல அனைத்திற்குமாக உதித்த மேலான திருக்குறள்‌ உள்ளது. இந்த சிறப்பு மிக்க 1330 திருக்குறட்பாக்களை மாணவர்கள்‌ இளம்‌ வயதிலேயே மனனம்‌ […]

பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மராத்தி மற்றும் ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகையான பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர், உடல்நலக்குறைவு மற்றும் வயது தொடர்பான சிக்கல்களால் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) காலமானார். மும்பையில் உள்ள சுஷ்ருஷா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை காலமானார். சுலோச்சனாவின் இறுதிச் சடங்கு இன்று மாலை 5:30 மணிக்கு தாதர் தகன மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDB Financial Services வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Manager பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் உள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு […]

மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என […]

100% நேரடிப்பயன் பரிமாற்றக் கணக்கை ஆதாருடன் இணைப்பதை அடைய மாநிலங்கள் முகாம்களை ஏற்பாடு செய்து பயனாளிகளோடு தொடர்பில் இருக்க வேண்டும்.பணிக்கு வரும் பயனாளியிடம் ஆதார் எண்ணை வழங்குமாறு கேட்க வேண்டும் என்றாலும் அதன் அடிப்படையில் பணி மறுக்கப்பட மாட்டாது.தொழிலாளி எபிபிஎஸ்க்கு தகுதியற்றவர் என்ற காரணத்தின் அடிப்படையில் வேலை அட்டைகளை நீக்க முடியாது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் திட்டம், ஆதார் வாயிலாக இயக்கப்பட்ட கட்டணத்தை ஏற்கவில்லை – […]

கன்னட நடிகர் நிதின் கோபி நெஞ்சு வலியால் காலமானார். மாரடைப்பால் பாதிக்கப்பட்ட கன்னட நடிகர் நிதின் கோபி காலமானார். அவருக்கு வயது 39. தனது குடியிருப்பில் வசித்து வந்த நிதின் கோபிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பல நன்றி வளமானார். நடிகர் பெங்களூரில் உள்ள இட்டமடுவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். நிதின் கோபியின் […]