சேலம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினரின்‌ பொருளாதார மேம்பாட்டிற்கு கடன்‌ பெற விண்ணப்பங்கள்‌ வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்‌ பொருளாதார சமேம்பாட்டுக்கழகத்தின்‌ கீழ்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்கள்‌ சுயதொழில்‌ செய்து பொருளாதார மேம்பாடு அடைய 2023-ஆம்‌ நிதியாண்டிற்குரிய கடன்‌ திட்டங்கள்‌ வழங்குவதற்கான விண்ணப்பங்கள்‌ மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. சிறு தொழில்கள்‌ மற்றும்‌ வியாபாரம்‌ செய்ய பொது காலக்கடன்‌, பெண்களுக்கான புதிய […]

அரசு அலுவலகங்களில்‌ பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான மாவட்ட ஓய்வூதியர்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ ஜுன் மாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில்‌ பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின்‌ ஓய்வூதியப்‌ பலன்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியம்‌ பெறுவதில்‌ ஏதேனும்‌ குறைகள்‌ இருப்பின்‌ அதனை நிவர்த்தி செய்யும்‌ பொருட்டு, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ வருகின்ற 07.06.2023 புதன்கிழமை காலை 10.30 மணியளவில்‌ […]

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கான சான்றிதழ்களை இ-சேவா மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து ஆசிரியர்‌ தேர்வுவாரிய துணை இயக்குநர்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில்; ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ 2012, 2013, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில்‌ நடத்திய தாள்‌ 1 மற்றும்‌ 2 ஆகியவற்றினை எழுதி தகுதி பெற்றவர்களுக்கு மறுபிரதி வாரியத்தின்‌ மூலமாக மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும்‌, ஆசிரியர்கள்‌ மறுபிரதி வழங்குவதற்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌ மூலம்‌ விண்ணப்பம்‌ செய்து […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Design Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 4 முதல் 8 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க […]

ஹஜ் பயணத்தில் முதல் முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 2023 ஹஜ் பயணத்தில் சவுதி அரேபியாவில் ஹாஜிகளுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக மற்றும் மருத்துவப் பிரிவினருக்கு மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஏற்பாடு செய்த பயிற்சியை மத்திய அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி தொடங்கி வைத்தார். இந்தப் பயிற்சியானது டெல்லி லோதி சாலை பகுதியில் உள்ள ஸ்கோப் வளாக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான ஹஜ் […]

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ மே 17,18 ஆகிய தேதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல்‌ 18-ம்‌ தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 – 3 […]

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்கக்‌ கல்வியில்‌ பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மலைப்பகுதி சுழற்சி கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளது, அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ மாறுதல்‌ கலந்தாய்வு 16-ம்‌ தேதியும்‌, அரசு நகராட்சி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ கலந்தாய்வு 16-ம்‌ தேதியும்‌ நடத்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு பணி நிரவல்‌ […]

இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மருத்துவ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌ நடத்திய தேர்வில்‌ முறையாக தேர்ச்சி பெற்று 13,000 செவிலியர்கள்‌ அரசு மருத்துவமனைகளில்‌ செவிலியர்களாக பணியாற்றி வருகிறார்கள்‌. இவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆணையில்‌, முதல்‌ இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில்‌ பணியாற்ற வேண்டும்‌ என்றும்‌பின்னர்‌ அவர்களின்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படும்‌ என்றும்‌ குறிப்பிடப்பட்டுள்ளதாக செவிலியர்கள்‌ தெரிவிக்கின்றனர்‌. ஆனால்‌ எட்டு ஆண்டுகளுக்கு மேல்‌ பணியாற்றியும்‌ மேற்படி 13,000 செவிலியர்களில்‌ […]

ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்த மாணவி சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 95.02 சதவீத மதிப்பெண்கள் பெற்று தனது பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். காஃபி (Kafi) என்ற அந்த பெண் தனது 3 வயதில் , பொறாமையின் காரணமாக அக்கம்பக்கத்தினர் அவளை ஆசிட் வீசி தாக்கினர், அதன் பிறகு அவள் முகம் முழுவதும் எரிந்து 6 ஆண்டுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இதனால் அவருக்கு கண்ணில் […]

சிபிஐயின் புதிய இயக்குனராக கர்நாடகா மாநில தலைமை காவல் அதிகாரி பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் சூட், மத்திய புலனாய்வுப் பிரிவின் இயக்குநராக உயர்மட்ட தேர்வுக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கர்நாடகாவில் காவல்துறை தலைமை இயக்குநராக பணியாற்றுகிறார், பிரவீன் சூட் தனது பணியில் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் மக்களவையின் […]