பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில்‌ மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம்‌ ரூ.20.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ வாங்கிடும்‌ திட்டத்தினில்‌ ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌/மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது. ஒருங்கிணைந்த அலங்கார மீன்‌ வளர்ப்பு அலகு (நன்னீர்‌ மீன்களை இனப்பெருக்கம்‌ மற்றும்‌ வளர்த்தல்‌) ரூ.25.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைத்தல்‌ திட்டத்தில்‌ பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ […]

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ஐ மீறி சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகளை விற்பனை செய்ததற்காக அமேசான், ஃப்ளிப்காட், ஸ்னாப்டீல், ஷாப்க்லூஸ், மீஷோ ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகளை மீறி, அநியாயமாக வியாபாரம் செய்ததற்காக, இந்த உத்தரவை ஆணையத்தின் தலைமை ஆணையர் நித்தி கரே பிறப்பித்துள்ளார். பொதுவாக கார்களில் பயணம் செய்யும் போது ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரும் சீட் […]

புதிய பாராளுமன்ற கட்டிடம் இம்மாத இறுதிக்குள் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படும் என சொல்லப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மே 26-ம் தேதி பதவியேற்ற நாள் என்பதால், அதே தேதியில் புதிய கட்டிடத்தை பிரதமர் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ள மழைக்கால கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெற வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டிற்கான […]

தி கேரளா ஸ்டோரி பட தடை விவகாரத்தில் ஏன் தியேட்டருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதா..‌? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ” தயாரிப்பாளர்கள் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி […]

தென்கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவிய “மோக்கா” புயலானது 11-ம் தேதி மாலை 5.30 மணி அளவில்‌ தீவிர புயலாக வலுப்பெற்று வடக்குத்‌ திசையில்‌ நகர்ந்து நேற்று காலை 5.30 மணி அளவில்‌ மிகத்தீவிரப்‌ புயலாக மத்திய மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ போர்ட்‌ பிளேயரில்‌ இருந்து சுமார்‌ 530 கிலோ மீட்டர்‌ மேற்கு -வடமேற்கே நிலைகொண்டுள்ளது. இதுவடக்கு – வடகிழக்குத்‌ […]

பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சேவைகளை குடிமக்கள்‌ எளிதில்‌ பெறும்‌ வகையில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஒவ்வொரு வட்டத்திலும்‌ மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ ஒவ்வொரு மாதமும்‌ நடத்தப்படும்‌ என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மே 2023 மாதத்திற்கான மாதாந்திர பொதுவிநியோகத்‌ திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ சென்னையில்‌ உள்ள 19 மண்டல உதவி ஆணையர்‌ அலுவலகங்களில்‌ இன்று காலை 10.00 மணி முதல்‌ பிற்பகல்‌ 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. […]

அண்ணா அறிவாலயத்தில் வரும் 20- ம்‌ தேதி திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ திமுக உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழு கூட்டம்‌ நடைபெறும்‌ என பொதுச்செயலாளர்‌ துரைமுருகன்‌ அறிவித்துள்ளார்‌. இது குறித்து அவர்‌ வெளியிட்ட அறிக்கையில்; திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ திமுக உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழுக்‌கூட்டம்‌ வருகின்ற 20.5.2023 தேதியன்று சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில்‌ சென்னை அண்ணா அறிவாலயத்தில்‌ உள்ள திமுக அலுவலகத்தில்‌ பொதுக்கூட்டம்‌ […]

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; உடலியக்க குறைபாடுடைய நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்‌, சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள்‌ (ஆக்சிலரி/எல்போ கிரட்சஸ்‌) போலியோவால்‌ பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காலிப்பர்கள்‌, விபத்தினாலோ அல்லது நோயாலோ கை மற்றும்‌ கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களும்‌, 18 முதல்‌ 60 வயது வரை உள்ள தையல்‌ பயிற்சி முடித்து தையல்‌ சான்று பெற்றுள்ள உடலியக்க குறைபாடுடையோர்‌, […]

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 58,545 வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. காலை 10 மணி முதல் முன்னிலை விவரம் வெளியாகி 12 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் […]

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகின்ற 15-ம் முதல் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்கக்‌ கல்வியில்‌ பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மலைப்பகுதி சுழற்சி கலந்தாய்வு 15-ம்‌ தேதியும்‌, அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ மாறுதல்‌ 15-ம்‌ தேதியும்‌, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ மாறுதல்‌ கலந்தாய்வு 16-ம்‌ தேதியும்‌, அரசு நகராட்சி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ கலந்தாய்வு 16-ம்‌ தேதியும்‌ நடத்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு பணி நிரவல்‌ செய்யப்பட்ட […]