முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. மாலை 5 மணியளவில்‌ நடைபெறும்‌ அமைச்சரவைக்‌ கூட்டத்தில்‌, பட்ஜெட்‌ கூட்டத்தொடரில்‌ அறிவிக்கப்பட்ட திட்டங்கள்‌, துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள்‌ மற்றும்‌ அவற்றை செயல்படுத்தும்‌ நடைமுறைகள்‌ குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சட்ட பேரவையில்‌ நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்‌ குறித்து […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Lead Analyst IPR பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 4 முதல் 5 வருடம் வரை அனுபவம் உள்ளவராக […]

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கியாஸ்புரா பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவு சம்பவத்தில் 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளதாக லூதியானா காவல்துறை ஆணையர் மந்தீப் சிங் சித்து தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தேசிய பேரிடர் […]

தமிழகம் முழுவதும் இன்று 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னல்‌ மற்றும்‌ மணிக்கு 30 கிலோமீட்டர்‌ முதல்‌ 40 கிலோமீட்டர்‌ வேகத்தில் பலத்த காற்றுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. இராணிப்பேட்டை, வேலூர்‌, திருப்பத்தூர்‌ மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழையும்‌, […]

12-ம்‌ வகுப்பு தேர்வு முடிவுகள்‌ வந்த அன்று மாலை 4 மணிக்குள்‌ தோல்வி அடைந்த மாணவர்களை உடனடியாக மறு தேர்விற்கு தயார்‌ செய்ய வேண்டும்‌. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்துடன்‌ இணைந்து கம்ப்யூட்டர்‌ மற்றும்‌ ஆங்கிலப்‌ பயிற்சிகளுக்கு 10, 11 மற்றும்‌ 12-ம்‌ வகுப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து தவறாமல்‌ பங்கேற்க செய்ய வேண்டும்‌. நுழைவுத்‌ தேர்வுவிவரங்களை கூறுவதும்‌, முதன்மைக்‌கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்துச்‌ […]

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி மீது திடீரென தொண்டர் ஒருவர் தனது மொபைல் போனை தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள மைசூருவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு மீறலில் பிரதமர் வாகனத்தின் மீது மொபைல் போன் ஒன்று வீசப்பட்டது. காவல்துறையின் கூற்றுப்படி, பெண் பாஜக தொண்டர் “உற்சாகத்தில்” தொலைபேசியை எறிந்தார், மேலும் […]

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில்‌ தொழிலாளர்‌ தின கிராம சபைக்கூட்டம்‌ இன்று காலை 11.00 மணி முதல்‌ நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில்‌ தொழிலாளர்‌ தின கிராம சபைக்கூட்டம்‌ இன்று காலை 11.00 மணி முதல்‌ நடைபெற உள்ளது. அதன் படி, அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள்‌ மற்றும்‌ ஊராட்சி செயலாளர்கள்‌ மேற்படி கிராம சபை கூட்டம்‌ நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும்‌ செய்துள்ளனர். கிராம சபை […]

குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டம்‌ 2009இன்‌ படி 2023-24ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 25% இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ LKG வகுப்பிலும்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ நடைபெற்று வரும்‌ பள்ளிகளில்‌ 1-ம்‌ வகுப்பு முதல்‌ மாணவர் சேர்க்கைக்கு மே மாதம்‌ 18-ம்‌ தேதி வரை rte.tnschool.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம். மே 18-ம் […]

இன்று தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள்‌ மூடப்பட வேண்டுமென அரசால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள உள்ள அனைத்து எப்‌.எல்‌.1, எப்‌.எல்‌.2, எப்‌.எல்‌.3, எப்‌.எல்‌.3ஏ மற்றும்‌ எப்‌. எல்‌.3ஏஏ உரிமம்‌ பெற்ற ஹோட்டல்‌ மற்றும்‌ கிளப்புகளில்‌ இயங்கி வரும்‌ மதுபானக் கூடங்கள்‌, டாஸ்மாக்‌ மதுபானக்கடைகள்‌ மற்றும்‌ டாஸ்மாக்‌ மது பானக்கடைகளுடன்‌ இணைந்துள்ள மதுபானக்கூடங்கள்‌ அனைத்தும்‌ மூடப்பட வேண்டும்‌. மேலும்‌, மேற்காணும்‌ நாட்களில்‌ இதனை மீறி விற்பனை செய்பவர்கள்‌ மீது அரசு […]