பல்வகைப்பணி (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர் மற்றும் ஹவில்தார் தேர்வு, 2022-ஐ கணினி அடிப்படையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தவுள்ளது. தென்பிராந்தியத்தில் இந்த தேர்வுக்கு 5,88,798 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் உட்பட 19 மையங்கள் / நகரங்களில் 32 இடங்களில் நடைபெறும். தென்மண்டலத்தில் மே மாதம் 2-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை என 19 நாட்கள் […]
தமிழகத்தில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 30-ம் தேதி அநேக இடங்களில் இடி மின்னலுடன் […]
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பில்; பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடுகிறார். தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள எண்ணிற்கு […]
கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தேர்தல் பிரச்சார பிரச்சார கூட்டத்தில் கூறுகையில், ஷெட்டர் பாஜகவை முதுகில் குத்தியுள்ளார் என்றும், ஹூப்ளி-தர்வாட்-மத்திய தொகுதியில் போட்டியிடும் அவர் வெற்றி பெற மாட்டார் என்பதை ரத்தத்தில் எழுதி கொடுக்கலாம் என்றும் […]
தமிழகத்தில் 11 இடங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக சுமார் 15,700 செவிலியர் பட்டதாரிகள் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெடி மருந்துகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம், மேட்டூர் அணைப் பகுதியில் மீன்வளத்துறையின் மூலம் மீனவர்களுக்கு மீன்படி உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீன்படி உரிமம் பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மீன் பிடித்து வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாத மீனவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, […]
உடல் நலக்குறைவு காரணமாக காலமான பஞ்ச முன்னாள் முதலமைச்சரின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற உள்ள நிலையில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5 முறை பஞ்சாப் முதல்வராகவும், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 95 வயதான அவர் மூச்சுக்குழாய் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கடந்த வாரம் மொஹாலியின் ஃபோர்டிஸ் […]
அண்ணாமலை – எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர். அதிமுகவின் பொதுச்செயலாளரான பிறகு மத்திய உள்துறை அமித்ஷாவை முதன் முறையாக நேற்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல யாரும் எதிர்பாராத விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் இந்த […]
உலக நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவீத அளவுக்கு மட்டுமே உள்ளது. ஆனால் பல்லுயிர் பெருக்க விகிதத்தில் 8 சதவீதமாக இந்தியா உள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இயற்கையைப் பாதுகாக்கும் கலாச்சாரத்துடன் பல்லுயிர் பெருக்கத்தில் இந்தியா சிறந்த வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த 75 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு சிவிங்கிப் புலிகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது உட்பட பல்லுயிர் பெருக்கத்தில் […]
2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட உள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத்தின் சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு ஒன்றை கடந்த மாத இறுதியில் தாக்கல் செய்தார். இரண்டு ஆண்டு […]