இத்தாலியின் பிரெசியா பகுதியில் நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் செங்குத்தாக விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். இந்த பயங்கர விபத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு இத்தாலியின் பிரெசியா அருகே உள்ள A21 கோர்டமோல்-ஆஸ்பிடேல் நெடுஞ்சாலையில் இந்த பயங்கர சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் இரு பயணிகளும் உயிரிழந்தனர் மற்றும் சாலையில் இருந்த நான்கு பேர் காயமடைந்தனர். ரிபப்ளிக் வேர்ல்டின் கூற்றுப்படி, விமானம் புறப்பட்ட […]
தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல ஆண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் இருக்கின்றனவா என்றால் இல்லை. ஆனால் தற்போது, ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, YCT-529 அதன் முதல் மனித பாதுகாப்பு சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. YCT-529 என்றால் என்ன, அது ஆண் உடலில் எவ்வாறு செயல்படுகிறது? எந்த ஹார்மோன்களும் இல்லாத கருத்தடை மாத்திரையான YCT-529, ஏற்கனவே விலங்கு பரிசோதனையில் நேர்மறையான […]
வரதட்சணை கேட்டு மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை துன்புறுத்தும் நோக்கத்தில் தனது 8 மாத குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு சாலையில் தூக்கிச்சென்ற நபரின் கொடூர செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் வரதட்சணை கொடுமைகள் அளவில்லாமல் அரங்கேறி வருகின்றனர். சமீபத்தில் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்ற இளம்பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அரங்கேறும் […]
தேசிய நெடுஞ்சாலைகள் ஆண்டுதோறும் 50,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சராசரியாக தினமும் 147 பேர் இறக்கின்றனர் என்று புள்ளிவிவரங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை தேசிய நெடுஞ்சாலைகளில் 26,770 பேர் இறந்துள்ளனர் என்பதை மின்னணு விரிவான […]
‘விளக்குக்கு எண்ணெய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் உடலுக்கு ஆரோக்கியம்’ என்று ரவீந்திர நாத் தாகூரின் பிரபலமான ஒரு வரி உண்டு. அதாவது, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஒருவர் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். ஒருவர் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், அவ்வப்போது அவருக்கு எல்லா வகையான நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன, இதன் காரணமாக அவரால் தனது வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை. ஒரு நபர் நல்ல வாழ்க்கையை விரும்பினால், அவர் உணவில் சிறப்பு […]
ரூ. 2000க்கு மேல் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக தற்போது வரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இந்தியாவிலும் உலக அளவிலும் UPI பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. காய்கறி விற்பனையாளருக்கு பணம் செலுத்துவதற்கோ அல்லது ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கோ, பெரும்பாலான மக்கள் இப்போது UPI ஐப் பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் UPI வழியாக ரூ.2000க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்கப்படும் என்று செய்திகள் […]
நவீன வாழ்க்கை முறையில் முதுகுவலி என்பது சாதாரணமானதாகி விட்டது. ஆனால் தவறான தோரணை, உடற்பயிற்சி தவிர்ப்பு, செயலற்ற வாழ்க்கை முறை ஆகியவை இந்த நிலையை வளர்க்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. எனவே, சரியான முன்னெச்சரிக்கைகள் மற்றும் தினசரி எளிய பயிற்சிகளின் மூலம், முதுகுவலியை தடுக்க முடியும். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில், முதுகுவலி ஒரு நவீன தொற்றுநோயாகவே மாறி வருகிறது. உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதித்து வரும். இந்த நிலை, […]
அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான பேபால்(PayPal), இந்தியாவின் UPI-ஐயுடன் கைகோர்த்துள்ளது. இதன்மூலம், இந்தியர்கள் வெளிநாட்டில் ஷாப்பிங் செய்வதற்கு யுபிஐ-யை பயன்படுத்தி பணத்தை செலுத்தலாம். இந்தியாவில்,மளிகை, உள்ளிட்ட பொருட்களுக்கு UPI மூலம் பணம் செலுத்துவது போல, எல்லைகளைக் கடந்து வெளிநாட்டிலும் இதை செயல்படுத்தும் நோக்கத்தில், உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான PayPal, நேற்று புதன்கிழமை, “PayPal World” எனும் உலகளாவிய பண பரிமாற்ற தளத்தை அறிமுகம் செய்தது. […]
அதிகரித்து வரும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், முக்கிய அமைப்புகள் மற்றும் குடிமக்களின் தரவைப் பாதுகாக்க ஒவ்வொரு இந்திய நகரமும் ஒரு தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியை (CISO) நியமிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு தயார்நிலை குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், ஒவ்வொரு இந்திய நகரத்திற்கும் ஒரு நியமிக்கப்பட்ட தலைமை […]
ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கும், அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் இது சக்தி வாய்ந்த அமாவாசையாக கருதப்படுகிறது. இந்த நாளில் தர்ப்பணம் மற்றும் பிற சடங்குகளைச் செய்வதன் மூலம், முன்னோர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்று, வாழ்வில் சுபிட்சம் உண்டாகும். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வது சிறப்பானது. குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, […]