தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் தொடர் முடிவுக்கு வந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஒவ்வொரு அணியும் தலா 7 லீக் ஆட்டங்களில் விளையாடின. இதையடுத்து லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடம் பெற்ற சேப்பாக்கம், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து, முதல் குவாலிபையர் போட்டியில் சேப்பாக்கை வீழ்த்திய திருப்பூர் அணி நேரடியாக […]
இந்தியாவின் மக்கள்தொகை சுகாதார கணக்கெடுப்பு 2019-21 இன் படி, காற்று மாசுபாடு 13 சதவீத முன்கூட்டிய பிறப்புகளுக்கும், 17 சதவீத குறைந்த எடை பிறப்புகளுக்கும் வழிவகுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு PLoS குளோபல் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்டது, மேலும் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் மற்றும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்காக, […]
டெல்லியில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், டெல்லியில் யமுனை நதி நீர்மட்டம் அபாயக் குறி அளவைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், ஹரியானாவில் உள்ள ஹதினிகுண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் யமுனை நதியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நீர்மட்டம் எச்சரிக்கை அளவை விட 1.3 மீட்டர் குறைவாகவும், அபாய அளவான […]
மருத்துவரை காதலித்து திருமணம் செய்த யூடியூபர் ‘டெக் சூப்பர் ஸ்டார்’ சுதர்சன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொபைல், டிவி, லேப்டாப் உள்ளிட்ட டெக்னாலஜி கேட்ஜெட்கள் பற்றி ரிவ்யூ செய்து வீடியோ வெளியிட்டு வருபவர் சுதர்சன். முன்பு டெக் பாஸ் என்ற யூடியூப் சேனலில் இயங்கி வந்த சுதர்சன், தற்போது ‘டெக் சூப்பர் ஸ்டார்’ என்ற சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சுதர்சன் […]
மத்திய காலத்திலிருந்து மறுமலர்ச்சி காலம் வரை, போர் மற்றும் மோதல்கள் தொடர்ச்சியான நிகழ்வாக இருந்து வருகின்றன. சமீபத்தில், இஸ்ரேல் மற்றும் காசா, ரஷ்யா மற்றும் உக்ரைன், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலை உலகம் கண்டுள்ளது, மேலும் சீனா மற்றும் தைவானுடனான பதட்டங்கள் கூட பிடிவாதமாக நீடிக்கின்றன. இத்தகைய போர்களும் மோதல்களும் பரவலான அழிவை உருவாக்குகின்றன. அதிக எண்ணிக்கையிலான கட்டிடங்கள் அழிக்கப்படுகின்றன, மக்கள் தங்கள் வீடுகளை […]
குஜராத்தில் சட்டவிரோதமாக ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை செய்த 2,352 பேரில் 741 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017 க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை சட்டவிரோதமாக […]
அதிபர் டிரம்பின் வரி கொள்கை சட்டத்தை விமர்சித்து வந்த எலான் மஸ்க், ‘அமெரிக்கா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். தற்போது டிரம்ப் -மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்தனர். அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக எதிர்க்க துவங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், புதிய கட்சி துவங்க இருப்பதாக கூறியிருந்தார். […]
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸையும் சேர்த்து ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன் – சச்சின் டிராபி’) பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமின், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587, இங்கிலாந்து 407 ரன் […]
ரஷ்யாவின் சில பகுதிகளில், பள்ளி மாணவியர் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது. பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு குறைய துவங்கி உள்ளது. உலக மக்கள் தொகையில் முதலில் இருந்த சீனாவே தற்போது பின்தங்கிவிட்டது.சீனா மட்டுமின்றி ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் பிறப்பு […]
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் பலியானவர்கள் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளதாகவும், ரூ.500 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழையால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மலைப்பகுதி முழுவதும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் (SEOC) கூற்றுப்படி, இந்த உயிரிழப்புகள் ஜூன் 20 முதல் ஜூலை 4, 2025 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தன, கனமழையால் ரூ.541 […]

