சிறு குழந்தைகள் என்றாலே முழுமையான உடல்நலத்துடன் இருப்பார்கள் என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. ஆனால், அரிதான சில சூழல்களில் குழந்தைகளுக்கும் திடீரென இதயத் துடிப்பு நின்று உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம். சமீப காலங்களில் பள்ளி மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, நேற்று முதலாம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு ‘ஹார்ட் அட்டாக்’ காரணமாக இருக்கலாம் என […]
சுற்றுச்சூழலில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். இதனால் முடி வறட்சி, பொடுகு, முடி உதிர்வு மற்றும் முடி உடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, தலைமுடியின் இயற்கையான பொலிவு குறைய வாய்ப்புள்ளது. இதற்காக பலரும் விலை உயர்ந்த கண்டிஷனர் மற்றும் ஹேர் மாஸ்க் போன்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், வீட்டிலேயே எளிமையான முறையில் இயற்கையான பொருட்களைக் கொண்டு ஹேர் கண்டிஷனர் தயாரித்துப் பயன்படுத்தலாம். அந்த வகையில், ஜாதி மல்லி […]
நாட்டில் நடைபெறும் அரசியல் சூழல் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார். இளைஞர்கள் தங்களது உரிமைகளுக்காக கேள்வி கேட்கத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டில் நிலவி வரும் “சர்வாதிகார ஆட்சியின் முடிவு நெருங்கிவிட்டது” என அவர் கூறியுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) மாநில மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரகாஷ் ராஜ் பேசினார். அப்போது, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை […]
தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான வாகனங்களை தேர்வு செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதற்காக பல்வேறு நிறுவனங்களின் கார் மாடல்கள் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் சமீபத்தில் பேசிய முதல்வர் விஜய், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனுடன், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் செலவு உள்ளிட்டவற்றை […]
தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாலியல் தொல்லை குறித்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில், அதனை திரும்பப் பெறுமாறு மிரட்டல் விடுக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, தென்மண்டல ஐ.ஜி.யிடம் அவர் நேரடியாக புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், தவெக செயற்குழு உறுப்பினராக உள்ளார். கட்சியில் கூடுதல் பொறுப்பு பெற்றுத் தருவதாக கூறி, […]
கள்ளக்காதல் காரணமாக ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை, இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் செங்குன்றம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்த எலக்ட்ரீஷியன், தனது மனைவியின் அண்ணியுடன் கள்ளக்காதலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த மனைவியின் சகோதரர்கள் அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (32). எலக்ட்ரீஷியனாக […]
திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட நிலையில், மனைவியின் தகாத உறவால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொள்ளிடம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (44). தச்சுத் தொழில் செய்து வந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் பணியாற்றி […]
ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை சிதைத்த கள்ளக்காதல், இறுதியில் கணவரையே தனது மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைக்கும் நிலைக்கு கொண்டு சென்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தவுளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீவநாத் ராஜ்பார். இவரது மனைவி சரிதா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வேலைக்காக ஜீவநாத் டெல்லியில் தங்கி வெல்டிங் தொழில் செய்து வந்த நிலையில், சரிதா குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். கணவர் வீட்டில் […]
ராஜஸ்தானில் கணவருடனான திருமண வாழ்க்கைக்கு இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதத்தில் முடிந்துள்ளது. தங்களது உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக மனைவி மற்றும் அவரது காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர். ஜெய்ப்பூரைச் சேர்ந்த 27 வயதான மகேஷ், கவிதா மீனா (23) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கவிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, […]
ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியர் குச்சியால் தாக்கியதாகவும், அதன்பின்னர் சிறுவன் மயங்கி விழுந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். விசாகப்பட்டினம் ஒன் டவுன் பகுதியில் உள்ள லிட்டில் கார்டன் பள்ளியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பிரணய் தேஜா என்ற அந்த சிறுவன், வியாழக்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அன்று காலை […]

